Saturday, 9 January 2010

கூட்டமைப்பின் முடிவு சரியா?

tna-for-press-meetநடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவினைப் பெற்றுக் கொள்வதற்காக இரண்டு பிரதான தரப்புக்களும் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டிருந்தன. எதிர்வரும் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா? அதன் மூலம் எதனையும் சாதித்துவிட முடியுமா? எனத் தீவிரமாக ஆராய்ந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இறுதியில் சில அம்சங்களைக் கோரிக்கைகளாக்கி இரண்டு தரப்பிடமும் முன்வைத்தது. இந்தக் கோரிக்கைகளுக்கு உடன்படும் வேட்பாளரைப் பிரதிநிதித்துவப்படுத்துவோருக்கு ஆதரவு வழங்குவதென கூட்டமைப்பு முடிவெடுத்திருந்தது.






தொடர்ந்து வாசிக்க...

2009 இல் ஹொலிவூட் திரையுலகம்.


உலகின் மிகப்பெரும் வர்த்தக – பொழுதுபோக்குத் துறைகளுள் ஒன்றான ஹொலிவூட் திரையுலகமானது நடந்து முடிந்த 2009 ஆம் ஆண்டில் 10 பில்லியன் வசூலை அமெரிக்கா, கனடா ஆகியவற்றில் திரட்டிச் சாதனை புரிந்துள்ளது. இதுவரையான காலப்பகுதியில் இந்தப் புள்ளி இப்போதுதான் ஹொலிவூட் திரையுலகத்தால் எட்டப்பட்டிருக்கிறது.
இதற்கு முன்னர் ஓராண்டில் அதிகளவான வசூலைக் குவித்தது (அமெரிக்கா, கனடாவில்) 2007 ஆம் ஆண்டில்தான். அவ்வாண்டில் 9.68 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வசூலாகியது. 2008 இல் இத்தொகை 9.63 பில்லியன்களாக இருந்தது. 2009 இல் இது அண்ணளவாக 10.6 பில்லியன்களாக உயர்ந்துள்ளது. 2009 இன் இறுதிப்பகுதியில் வெளியான ‘Avatar’ மற்றும் ‘Sherlock Holmes’ ஆகிய படங்கள் இவ்வாண்டுக்கான வசூலை உயர்த்தியவற்றில் முக்கியமானவை.

Friday, 8 January 2010

கயிறு நாவலின் சில துளிகள்

kayiruகதையின் தொடக்கத்தில் கோயிலைச் சேர்ந்த 'எருமத்ர' மடத்தினை  'கண்டெழுத்து' (நில அளவுRevenue survey and settelment period) எழுதவருகிற 'க்ளாசிப்பேரு கொச்சுப்பிள்ளை' (classifier)க்காக சுத்தம் செய்து தயார் ஆக்குகிறார்கள். கோடாந்திர முத்தாசான் போன்றவர்களுக்கு கிளாசிப்பேர் என்றால் அந்த பெயரை வைத்து என்ன மாதிரியான வேலை அது, என்ன ஜாதியைச் சேர்ந்தவர் என்று பல குழப்பங்கள். அதுகாலம் வரையிலும் பிராமணல்லாதவரை எருமத்ரமடத்தில் தங்க வைத்ததில்லை. ஆனால் பொன்னு தம்பிரான் (ராஜா) உத்தரவு . இதனைக் காலமாற்றம் நிகழத்தொடங்கியதின் குறிப்பு  எனக்கொள்ளலாம். செய்யும் வேலையினைக் கொண்டு ஒருவருடைய நிலை உயர்த்தப்பட்டுவிட்டது.


















தொடர்ந்து வாசிக்க...

"எதிரியின் எதிரி நண்பன்": இப்போது அதுவே ஆயுதம்


CowsArmyVellankulamநீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க தயாராகிவிட்டது. இத்தேர்தல் மூலம் தமிழர் தரப்புக்கள் சாதிக்கபோவது என்ன? சரத் பொன்சேகாவிடமிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பால் என்ன உத்தரவாதங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன? அவை தொடர்பான உறுதிப்பாடுகள் எவை என்பது பற்றி இப்பத்தி ஆராய்கிறது.
தற்போது தமிழ் மக்களுடைய உடனடி பிரச்சனைகளை முன்வைத்து இரண்டு பிரதான வேட்பாளர்களுடனும் தொடர்ச்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

Thursday, 7 January 2010

சரியான பரஸ்பர நிதியத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

coinsபரஸ்பர நிதிகள்(Mutual funds) என்றால் என்ன? அவற்றின் நிறைகுறைகள் என்னென்ன என்பன குறித்து சென்ற கட்டுரையில் கண்டோம். நாம் பரஸ்பர நிதியில் முதலீடு செய்வதாக இருந்தால், சரியான பரஸ்பர நிதியத்தினைத் தேர்ந்தெடுப்பது எப்படி என்பது குறித்து இக்கட்டுரையில் காணலாம்.








தொடர்ந்து வாசிக்க...

Wednesday, 6 January 2010

ஈழகாவியம் - 16


Washington0220_x05


ஈழகாவியம்
புலத்துக் காண்டம்
அத்தியாயம் -16
ஐந்தொகை-10
முடிப்புரை- எழுத்தர் எண்ணம்!

என்னரும் தமிழீர் இந்த
          இனியபத் தாண்டு தன்னில்
இன்னொரு பதியம் வைத்து
          எழுந்துமே நடக்கின் றோமே!
ஒன்பதாம் வருடம் செத்த
          உடல்களாய் இராட்ச தர்கள்
தின்றனர்! தமிழிச் சிக்கள்
         தீயுடல் தந்தார் அன்றோ!
தொடர்ந்து வாசிக்க...

சுவடுகள் - 8. கப்டன் அருணன்


அன்று மாலையே நாங்கள் தங்கியிருந்த வீடு களைகட்டத் தொடங்கியது. வழமையான – அலுப்புத்தட்டும் இரவுகள் போலன்றி இன்றைய இரவு சுவாரசியமாகக் கழியப் போகின்றது என்ற உற்சாகம் எம்மைத் தொற்றிக் கொண்டது. விறகு, சீனி, தேயிலை என்று தேனீர் போடத் தேவையான பொருட்களைச் சரிபார்த்து வைத்துக் கொண்டான் மறவன். இந்தப் பரபரப்பெல்லாம் அருணனுக்கானத்தான். வரப்போகும் விருந்தாளியை எதிர்பார்த்துக் காத்திருந்தோம்.
Maveerar2நான் அருணனை முதன்முதல் கண்டது கற்சிலைமடுவில். எமது கற்கை நெறி கற்சிலைமடுவில் நடந்துகொண்டிருந்தபோது அங்கிருந்த நிர்வாக அலுவலகத்துக்கு வந்திருந்தான். பல படையணிகள், துறைகளிலிருந்து வந்த போராளிகள் அக்கற்கை நெறியில் இருந்தனர். அருணன் முன்பு விடுதலைப் புலிகளின் ஆங்கிலக் கல்லூரியில் இருந்திருக்க வேண்டும். எம்மோடு நின்ற ஆங்கிலக் கல்லூரிப் போராளிகளான கப்டன் கர்ணன், மேஜர் பூபதி (இவர்கள் இருவரும் பின்னர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கடலில் வீரச்சாவு) ஆகியோரைச் சந்திக்க வந்துபோய்க்கொண்டிருந்த அருணன் ஓரிரு நாட்களிலேயே எம்மோடு நெருக்கமாகிவிட்டான். அவனது சுபாவமே அப்படித்தான். யாரோடும் இலகுவில் நெருக்கமாகிவிடுவான்.




வலுவான எலும்புகள்; வலியில்லா வாழ்க்கை

onion_onions_springநம்மில் பலர் காலையில் எழுந்திருக்கையிலேயே அதிகமான இடுப்புவலி, முதுகுவலியுடன் எழுகிறோம். அதற்கு என்ன காரணம்? வயதானவர்கள் பலருக்கு, மிக இலேசாக அடிபட்டாலே எலும்பு முறிவு ஏற்படுகிறது. உடம்பிலேயே மிக வலுவானது என்று கருதப்படும் இந்த எலும்புகள், பட்பட் என்று ரொட்டித்துண்டு போல் உடைவது ஏன்?அது மட்டுமல்ல. இன்று பல சிறு குழந்தைகளுக்குக் கூட கை கால்கள் வளைதல், எளிதில் எலும்பு முறிதல் ஆகியவை ஏற்படுகின்றன என்பதைப் பல செய்தித்தாள்களில் படிக்க நேரிடுகிறது.




தொடர்ந்து வாசிக்க...

மின்சாரத் தொடர்வண்டி (Electric Trains)

250px-Db-152073-00தொடர்வண்டி (Train) என்றதும் உடனடியாக எமது மனக்கண்முன் தோன்றும் வடிவம் நீண்ட காலமாகப் பயன்பாட்டிலுள்ள எரிபொருள் இயந்திரத்தின் மூலம் இயங்கும் தொடர்வண்டியே. பெரும் சுமைகளைச் கொண்டு செல்லும் பணிகளில் இன்றும் எரிபொருள் மூலம் இயங்கும் தொடர்வண்டிகள் பயன்படுத்தப்படுகின்றதன. இருந்தபோதிலும் பயணிகள் போக்குவரத்துக்கான தேவைகளில் பெரும்பாலான நாடுகளில் இன்று மின்சாரத்தில் இயங்கும் தொடர்வண்டிகள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. மின்சாரத் தெடர்வண்டிகளின் வருகையின் பின்னர் தொடர்வண்டிகளைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவில் உயர்ந்துள்ளது. இத்துடன் உயர் சக்தியை வழங்கவல்ல மின்சாரத் தொடர்வண்டிகளின் பராமரிப்பு மற்றும் இயக்கத்திற்கான பொருளாதாரச் செலவு ஒப்பீட்டளவில் குறைவாகக் காணப்படுவதும் இவ்வகைத் தொடர்வண்டிகளின் அதிகரித்த பயன்பாட்டிற்கான பிரதான காரணிகளில் ஒன்றாகக் காணப்படுகின்றது.


தொடர்ந்து வாசிக்க...

Monday, 4 January 2010

புதிய ஆண்டில் தமிழர்களின் பணி என்ன?

thaipongal-2005இழப்புக்களையும் வலிகளையும் சுமந்த ஆண்டான 2009 கடந்து இன்று புதிய ஆண்டில் காலடி எடுத்துவைக்கின்றோம். முப்பது வருடங்களுக்கு மேலாக தொடர்ந்த விடுதலை போராட்டம் வல்லாதிக்க சக்திகளின் உதவியுடனும் போராட்ட பயணத்தில் உறுதியோடு பயணித்து தடம்மாறி காட்டிக்கொடுப்போராக மாறிய எம்மவர்களின் துரோகங்களுடனும் எமது தமிழ் இராச்சியம் மீளவும் வீழ்த்தப்பட்ட ஆண்டாக 2009 ஆம் ஆண்டு கடந்துசெல்கின்றது. புதிய ஆண்டில் தமிழர்களின் பணி என்ன?


தொடர்ந்து வாசிக்க...

அழகின் பின்னனி


Alagin_Pinnani
நளினத்தின் பின்னணியில் நங்கை அழகு!
உளிகளின் பின்னணியில் ஓசை அழகு!
விழிகளின் பின்னணியில் பார்வை அழகு!
துளிகள் மழையின் அழகு.



தடுமாறும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தடம்மாறப் போகிறதா?

tna-undecidedதாயகத்தில் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூலமாகவாவது தமிழ்த் தேசிய ஒற்றுமையை நிலைநிறுத்தி தமிழ் மக்களுக்கான உரிமைகளை ஒரே குரலில் நின்று பெற்றுக்கொள்ள முடியுமென்ற எதிர்பார்ப்பு அனைத்து மட்டங்களிலிருந்தது. ஆனால் தற்போது எதிர்பாராமல் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையை எவ்வாறு எதிர்கொள்வது என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே வெவ்வேறான நிலைப்பாடுகள் இருப்பது வெளிக்காட்டப்பட்டு வருகின்றது.














தொடர்ந்து வாசிக்க...



Saturday, 2 January 2010

மாறுங்கள், மாற்றுங்கள்

noone-careமாற்றம் ஒன்றுதான் மாற்றமில்லாதது என்பது பொன்மொழி. நேற்றுபோல் இன்று இல்லை, இன்று போல் நாளையில்லை. ஒவ்வொரு நாளும் உலகம் ஒரு புதிய மாற்றத்தைக் கண்டு வருகிறது. ஆதிமனிதன் முதலில் இலைகளை உடுத்தத்தொடங்கியது முதல், இன்றைய கணிணி யுகம் வரை, வாழ்க்கை முறைகளில், வியாபாரங்களில், தகவல் பரிமாற்றங்களில், சுற்றுப்புறச் சூழலில் எத்தனை எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இந்த மாற்றங்களுக்கு ஏற்ப, தம்மைத் தகவமைத்துக்கொள்ளாத எதுவும் நிலைத்திருக்க முடிவதில்லை. இந்த மாற்றங்களுக்கு ஏற்ப மாறாத உயிரினமான டைனோசர், எத்தனையோ பெரியதாக இருந்தும், சுத்தமாக அழிந்து விட்ட உயிரினமாகி விட்டது. சூழலுக்கேற்ப தம்மைத் தகவமைத்துக்கொள்ளும் கரப்பான்பூச்சிகளை எத்தனை பூச்சிக்கொல்லிகள் வந்தும் அழிக்க இயலவில்லை. இன்று பெங்குயின்கள் கூட மெள்ளமெள்ளப் பறக்கத் துவங்குவதாக ஒரு பிபிசி நிகழ்ச்சியில் பார்த்தோம்.


தொடர்ந்து வாசிக்க...

சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏன் அவசியம்: 10 காரணங்கள்

Mahinda_-_monksசிறிலங்காவுக்கான அரச தலைவர் தேர்தலுக்காக தமிழர் தரப்பு தமது முடிவினை விரைவினில் வெளிப்படுத்தவேண்டிய நிலையில் இருப்பதால் ஆட்சி மாற்றத்தின் மூலம் சாதிக்கப்போவது என்னென்னவென்பது பற்றியும் அதற்கு அவசியமான காரணங்கள் பற்றியும் அலசுகிறது இக்கட்டுரை.

சில நேரங்களில் சில மனிதர்கள்

நியூயார்க் நகரத்தின் சுரங்கப்பாதை ஒன்றில் பிரபல எழுத்தாளர் ஒருவர் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் அமைதியாக அமர்ந்திருந்தார். ஆட்கள் அதிகமில்லாத அந்த இடத்தில் ஒரு அமைதியான சூழ்நிலை நிலவியது. சிலர் கண்களை மூடி அமர்ந்திருந்தார்கள். சிலர் பத்திரிகைகள் படித்தபடி அமர்ந்திருந்தார்கள். திடீரென்று அங்கு ஒருவர் தன் இரண்டு குழந்தைகளுடன் வந்தார். அவர் அந்த எழுத்தாளர் அருகே கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்தார். அந்த சிறுவர்கள் இருவரும் ஆறு வயதைத் தாண்டாதவர்கள். அவர்கள் விளையாட ஆரம்பித்தார்கள். சிறிது நேரத்தில் அங்கிருந்த அமைதி காணாமல் போயிற்று. குழந்தைகள் சத்தம் போட்டு விளையாட ஆரம்பித்து, பின்னர் சண்டையிட்டுக் கொண்டு ஒருவருக்கொருவர் பொருட்களை எடுத்து வீசிக்கொள்ள ஆரம்பித்தனர். அந்த தந்தையோ அந்த சிறுவர்களைக் கண்டிப்பதாகத் தெரியவில்லை. கண்களைத் திறக்காமல் அப்படியே அமர்ந்திருந்தார்.


என். கணேசன்