Showing posts with label புலம்பெயர்ந்தோர். Show all posts
Showing posts with label புலம்பெயர்ந்தோர். Show all posts

Thursday, 17 September 2009

தாயக உறவுகளின் அவலங்கள் தணிப்போம்


பேரினவாத ஆக்கிரமிப்புப் போரின் உக்கிரத்தை அனுபவித்துக்கொண்டிருக்கும் தமிழ்மக்களின் முகாம் வாழ்க்கை இன்னமும் முடிவுக்குவராத -  அரசியல் மயப்படுத்தப்பட்ட - சாபக்கேடாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. அங்குள்ள மக்களின் பிரச்சனைகளைக் காணப்பித்து எவ்வாறு வெளிநாடுகளிடமிருந்து நிதியைப் பெற்று ஒரு சொற்பத்தை உதவிவிட்டு மீதியைத் தமது திறைசேரியை நிரப்புவதற்குப் பயன்படுத்தலாம் என்ற திட்டமிடல்களில்தான் கொழும்பு அதிகார வட்டம் தொடர்ச்சியாகப் பயணித்து வருகிறது. இந்நிலையில் முகாம்களில் வாழும் மக்களின் பிரச்சனைகள் தினமும் பெருகிப் பெருகி அவர்களின் தேவைகள் அதிகமாகிய வண்ணமுள்ளன.
- முகாம்களிலிருந்த சுமார் 250 இற்கும் மேற்பட்ட கற்பிணித் தாய்மார்களுக்குக் குழந்தைகள் கிடைத்திருப்பதால் அவர்களுக்கான அவசியத் தேவைகள் அவசரமாகியுள்ளன.
- அங்குள்ள சுமார் 40 ஆயிரம் சிறுவர்களுக்கான போசாக்குணவு அவசர தேவையாகியுள்ள அடுத்த விடயம்.
- முகாம்களிலுள்ள பெண்களுக்கான தேவைகள் அவசியம் கவனிக்கப்படவேண்டிய இன்னொரு முக்கிய விடயம்.
- சகலருக்குமான மருத்துவ மற்றும் சுகாதார வசதிகள் அத்தியாவசியமான அடிப்படைத் தேவைகள்.
- இவை எல்லாவற்றுக்கும் மேலாக அங்குள்ள மக்களுக்கு மூன்று வேளை உணவு.
-தெய்வீகன்

Tuesday, 1 September 2009

உலகமே எதிர்த்தாலும் உரிமைக்குரல் ஓயாது

ஈழ விடுதலைப்போராட்டத்தின் இருப்பினை அடியோடு அழித்துவிடவேண்டும் என்பதில் வெறித்தனமாகச் செயற்படும் சக்திகளின் சதியால் தமிழீழ விடுதலைப்புலிகளின் செயலாளர் நாயகம் பத்மநாதன் அவர்கள் அண்மையில் கைதாகிக் கடத்தப்பட்டிருப்பதன் பின்னர் ஈழத்தமிழர்களின் அரசியல் இருப்பும் விடிவுக்கான போராட்டமும் எந்தத் திசையில் பயணிக்கப்போகிறது என்ற கேள்வி பல்வேறு மட்டங்களிலும் எழுந்துள்ளது.

"சிறிலங்காவில் புலிப்பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது. அதற்கு உயிர்ப்பளிக்கும் செயற்பாடு உலகின் எந்த மூலையில் நடைபெற்றாலும் அதைத் தேடிச்சென்று நசுக்கும் வல்லமையுடன் சிறிலங்கா அரசு உள்ளது" - என்று பத்மநாதன் அவர்களின் கைதின் பின்னர் பேசிய சிறிலங்கா அரசின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். தமிழர்களின் உரிமைப்போராட்டத்துக்குப் பயங்கரவாத முலாம் பூசியது மட்டுமல்லாமல், அந்தப் போராட்ட உணர்வுடன் உள்ள புலம்பெயர்ந்த தமிழ்மக்களின் செயற்பாடுகளுக்கும் சிறிலங்கா அரசு சவால் விடுத்திருக்கிறது. 



தொடர்ந்து வாசிக்க...


-பொற்கோ

Saturday, 22 August 2009

பன்னாட்டுச் சமூகத்தின் அச்சத்தின் பின்னணியில் தமிழர் தரப்பின் விளக்கம்

இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பது மற்றும் அரசியல் கருத்து இணக்கப்பாட்டை ஏற்படுத்துவது என்பன தொடர்பில் உள்நாட்டில் உள்ள தமிழர்களுடன் மட்டுமல்ல வெளிநாடு வாழ் தமிழர்களுடனும் சிறிலங்கா அரசு பேச்சுக்களை நடத்த வேண்டும் என்று அமெரிக்க வெளிவிவகாரத்துறை துணை அமைச்சர் றொபேர்ட் ஓ பிளேக் பிபிசி செய்திச் சேவைக்கு அண்மையில் வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருக்கிறார்.

மேலோட்டமாகப் பார்க்கும்போது, அமெரிக்க அரச தரப்பு அதிகாரி கூறிய இந்தக் கருத்து புலம்பெயர்ந்துவாழும் தமிழ்மக்களின் கருத்துக்கள் தொடர்பில் அமெரிக்கா கரிசனைகொள்வது போலவும் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்களுக்குக் கைமேல் பலன் கிடைத்தது போன்ற ஓர் அர்த்தத்தை வெளிப்படுத்தினும், அந்த வாக்கியங்களுக்குப் பின்னால் தொக்கிநிற்கும் பல அர்த்தங்கள் அமெரிக்காவுக்கு மட்டுமல்ல சர்வதேச சமூகத்துக்குத் தொடர்ந்தும் இருந்துவருகின்ற தீராத அச்சத்தின் வெளிப்பாடுகளே ஆகும்.



தொடர்ந்து வாசிக்க...


-முகிலன்

புலம்பெயர்ந்துவாழும் தமிழரின் பொருளாதார பலம் சாதிக்கவேண்டிய தளம்

சர்வதேச அரங்கில் எந்த ஒரு மாற்றத்தையும் தீர்மானிக்கும் மிகப்பிரதான சக்தியாக பொருளாதார பலம் எனப்படும் விடயம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுவே இன்றைய வேகமான உலகின் மிகப்பெரும் ஆயுதமாகவும் நோக்கப்படுகிறது.

உலக அரங்கில் இடம்பெறும் சமாதான உடன்படிக்கைகள் மற்றும் சமரச வரைவுகள் முதல் சண்டைகள் வரை எல்லாமே இந்தப் பொருளாதாரப் பலத்தைக் கையகப்படுத்துவதற்கான மூலோபாயமாகவே காணப்படுகிறது.

அந்த வகையில், உலகமயமாக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் சர்வதேச அரங்கில் தமிழர்களின் பொருளாதார பலத்தை நிரூபிக்கும் பாதையின் ஊடாகவும் பயணிக்கவேண்டிய தேவை தற்போது அதிகரித்துள்ளது.


தொடர்ந்து வாசிக்க...

Monday, 17 August 2009

உறுதியான முடிவுகளே உலகத்தமிழர்களுக்கான வழி


ஈழத் தமிழரின் இன்றைய நிலைமை மிகக் கவலைக்குரியதாகியுள்ளது என்று சொல்லுவதைவிட கேள்விக்குரியதாகியிருக்கின்றது என்று சொன்னால் சாலப்பொருந்தும். சர்வதேசத்திடமிருந்தாவது நீதி கிடைக்கும் என்று நம்பியிருந்தவர்களுக்கு, சர்வதேசம் ஈழத்தமிழர்கள் விடயத்தில் மேற்கொள்ளும் ஒவ்வொரு விடயமும் பாதகமாகவே அமைந்து விடுகின்றது. இவை தற்செயலாகவோ அல்லது ஈழத்தமிழரின் பிரச்சினை தொடர்பான புரிதல் இல்லாததினாலோ மேற்கொள்ளப்படுவதில்லை என்பதனை, அண்மையில் நடந்த பத்மநாதன் அவர்களின் கைதும் அவர் உடனடியாகவே இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட சம்பவமும் தெளிவுபடுத்துகின்றது.
leaderகடந்த மே மாத நடுப்பகுதியில், முள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்தேறிய துயரச் சம்பவங்கள் இன்னும் மனதை வாட்டிவதைக்கும் நிலையில், இவ்வாறான சதிச் செயல்கள் சர்வதேசத்தின் மீதுள்ள சிறுநம்பிக்கையையும் இல்லாமற் செய்துவிட்டிருக்கின்றது.
-பருத்தியன்

Tuesday, 11 August 2009

இனி ஈழத்தின் ‘இதயம்’: புலம்பெயர்வாழ் இளையோரின் பலம்

சுமார் 25 ஆயிரம் மாவீரர்களின் அர்ப்பணிப்புடன் 30 ஆண்டு காலம் நடைபெற்ற தமிழீழ விடுதலைப்போராட்டத்தை உலகமயமாக்கி தமிழர்களின் அடையாளம் என்ன என்பதை உலகின் மூலை முடுக்கெங்கும் எடுத்துக்கூறி –

தமிழர்களின் வீரத்தினதும் தியாகத்தினதும் உச்சத்தை இன்னும் பல்லாண்டு காலம் இந்த உலகம் உச்சரிக்கும்வகையிலான ஓர் ஒப்பற்ற சூழ்நிலையை உருவாக்கி –

தமிழினத்தின் அடுத்த கட்டப்போராட்டத்தை அடுத்த சந்ததியினரிடம் ஒப்படைத்துள்ளார்கள் தமிழீழ விடுதலைப்புலிகள்.

புலம்பெயர்ந்து வாழும் இளம் தலைமுறை அந்தப்பொறுப்பினைப் பெற்றுக்கொண்டு அதனை மிகவும் பக்குவமாக – உணர்வுபூர்வமாக – தமக்கு தமது இனத்தின் தலைவன் இதுவரை காலமும் காட்டிய அந்தக் கொள்கை பிசகாத பாதையில் முன்னெடுத்துச் செல்வதற்கு திடசங்கற்பம் பூண்டுள்ளது.


தொடர்ந்து வாசிக்க...