Saturday, 29 August 2009
யாழில் இருந்து தமிழனின் இன்றைய இசைவரை...
Friday, 28 August 2009
கூட்டம்
கனவுப்பாதை
உறக்கத்தின் வாயிற்கதவு தேடி,
கண்மணிகளின் நகர்வுகள்……
அந்த இரவையும் கிழித்துக்கொண்டு,
வாயில்தூண்களை உடைத்தெறிந்தபடி
உள்நுழைகிறது அந்த ஒளிக்கீற்று ….
தன்வழிப்பயணமாய் தொடங்கிற்று
கனவெளியின் தூரப்பாதை கனவு நோக்கி,
தொடர்ந்து வாசிக்க...
-ஜானி சங்கையா
நமக்கானதோர் மாலைப்பொழுது
வனைந்துகொண்டிருக்கிறதொரு பறவை
சொல்லொன்று பூமியில் வந்து தெறிப்பதற்கும்
பனம்பழம் கொப்பறுந்து விழுவதற்குமான நிகழ்தகவினை
எந்தப் பின்னமும் உறுதிசெய்வதாயில்லை
யாவரும் நலம்
Wednesday, 26 August 2009
ஓகஸ்ட் 25 – தமிழர் படைபலத்தில் முக்கியநாள்
ஈழத்தின் வன்னிப்பகுதியில் அரசாட்சி செய்தவன்தான் இந்தப் பண்டாரவன்னியன். வன்னிமையின் இறுதி மன்னன்.
இலங்கைத்தீவில் யாழ்ப்பாணம் உட்பட பல இராசதானிகள் வெள்ளையர்களிடம் வீழ்ச்சி கண்டபின்னரும் வன்னிமண் நீண்டகாலம் வெள்ளையரிடம் வீழ்ந்துவிடாமல் இருந்தது. அந்த வன்னி இராசதானியின் இறுதி மன்னனான பண்டாரவன்னியன் தனது இறுதிமூச்சுவரை வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டான். ஓகஸ்ட் 25 ஆம் நாள் அம்மன்னனின் நினைவுநாளாக நினைவுகூரப்படுகிறது.
சாவின் விளிம்பிலுள்ள சரணடைந்த போராளிகள்
போர் உச்சக்கட்டத்தை அடைந்த கடந்த மே மாத காலப்பகுதியில் சிறிலங்கா அரசு தனது மிகக்கொடூரமான - மிருகவெறித்தனமான - நடவடிக்கைகளை தமிழ்மக்களின் மீது கட்டவிழ்த்துவிட்டிருந்தமை யாவரும் அறிந்தவிடயம். ஈற்றில் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு நிராயுதபாணிகளாக வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த விடுதலைப்புலிகளின் அரசியல்துறை தலைவர் பா.நடேசன் மற்றும் சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோரை சிறிலங்கா படையினர் மிகக்கொடூரமான முறையில் சுட்டுக்கொன்றனர். மொத்தத்தில் சர்வதேச போர் நியமங்களை அனைத்தையும் மீறிய படுபாதகங்களை அங்கு அரங்கேற்றியது.
தொடர்ந்து வாசிக்க...
-சேரன்
13 ஆவது அரசமைப்பு சட்ட திருத்தம் சொல்வது என்ன?
தமிழ்மக்களுக்கு என்ன தீர்வு கொடுக்கலாம் என்பதை அரசியல் கட்சிகளை அழைத்துப் பேசுவதற்கு அமைக்கப்பட்ட 'அனைத்துக்கட்சி ஆலோசனை சபை' என்ற அமைப்பின் ஊடாக தீர்வு ஆராய்ச்சி நடைபெற்று முடிவடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 123 அமர்வுகளின் பின்னர் தற்போது தீர்வு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அனைத்துக்கட்சி ஆலோசனைக்குழுவின் தலைவர் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில்,தமது தீர்வுத்திட்டம் 13 ஆவது அரசமைப்பு சட்ட சீர்திருத்தத்தின் சாராம்சத்தை முழுமையாக உள்ளடக்கியதாக இருக்கும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து வாசிக்க...
-பொற்கோ
Saturday, 22 August 2009
பன்னாட்டுச் சமூகத்தின் அச்சத்தின் பின்னணியில் தமிழர் தரப்பின் விளக்கம்
மேலோட்டமாகப் பார்க்கும்போது, அமெரிக்க அரச தரப்பு அதிகாரி கூறிய இந்தக் கருத்து புலம்பெயர்ந்துவாழும் தமிழ்மக்களின் கருத்துக்கள் தொடர்பில் அமெரிக்கா கரிசனைகொள்வது போலவும் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்களுக்குக் கைமேல் பலன் கிடைத்தது போன்ற ஓர் அர்த்தத்தை வெளிப்படுத்தினும், அந்த வாக்கியங்களுக்குப் பின்னால் தொக்கிநிற்கும் பல அர்த்தங்கள் அமெரிக்காவுக்கு மட்டுமல்ல சர்வதேச சமூகத்துக்குத் தொடர்ந்தும் இருந்துவருகின்ற தீராத அச்சத்தின் வெளிப்பாடுகளே ஆகும்.
தொடர்ந்து வாசிக்க...
-முகிலன்
உரிமைப்போரின் உயிர்த்துடிப்பை உறுதிசெய்துள்ள வரலாற்றுத் தீர்ப்பு
போர் முடிவடைந்ததாக சிறிலங்கா அரசினால் அறிவிக்கப்பட்ட நிலையில் பல இலட்சக்கணக்கான மக்களை முகாம்களிலும் திறந்த வெளிச்சிறைகளிலும் வைத்திருந்தபடி - அந்த மக்கள் அடுத்த நேர உணவுக்கு மன்றாடிக்கொண்டிருக்க - தான் நினைத்த அரசியல் நிகழ்ச்சி நிரலை மக்கள் மீது திணித்து, தனது அதிகார ஆக்கிரமிப்பை நிலைநாட்ட முயன்ற சிங்கள அரசுக்கு தற்போது கிடைத்திருப்பது தோல்வியே ஆகும்.
தொடர்ந்து வாசிக்க...
-சேரன்
புலம்பெயர்ந்துவாழும் தமிழரின் பொருளாதார பலம் சாதிக்கவேண்டிய தளம்
சர்வதேச அரங்கில் எந்த ஒரு மாற்றத்தையும் தீர்மானிக்கும் மிகப்பிரதான சக்தியாக பொருளாதார பலம் எனப்படும் விடயம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுவே இன்றைய வேகமான உலகின் மிகப்பெரும் ஆயுதமாகவும் நோக்கப்படுகிறது.
உலக அரங்கில் இடம்பெறும் சமாதான உடன்படிக்கைகள் மற்றும் சமரச வரைவுகள் முதல் சண்டைகள் வரை எல்லாமே இந்தப் பொருளாதாரப் பலத்தைக் கையகப்படுத்துவதற்கான மூலோபாயமாகவே காணப்படுகிறது.
அந்த வகையில், உலகமயமாக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் சர்வதேச அரங்கில் தமிழர்களின் பொருளாதார பலத்தை நிரூபிக்கும் பாதையின் ஊடாகவும் பயணிக்கவேண்டிய தேவை தற்போது அதிகரித்துள்ளது.
Friday, 21 August 2009
நுனிக்கொம்பு
உயிர்க்கிறுதி யாகி விடும்
சால மிகுத்துப் பெயின்
Thursday, 20 August 2009
பாதை திறப்பின் ஊடாக அரசின் விளம்பரமும் வியாபாரமும்
இனப்பிரச்சினையின் உஷ்ணம் ஆயுதப்போராட்டத்தின் ஊடாக வெடித்த காலப்பகுதியில் - 1984 ஆம் ஆண்டில் - தமிழர்தாயகத்துக்கான மிகமுக்கியமான நெடுஞ்சாலையான ஏ-9 வீதியை சிறிலங்கா அரசு இழுத்து மூடியது. சுமார் 18 வருடங்களின் பின்னர், சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி 15 ஆம் திகதி இப்பாதை மீண்டும் திறக்கப்பட்டது. அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் மீண்டும் ஆரம்பித்த முறுகல் நிலையை அடுத்து 2006 ஆம் ஆண்டு ஆவணிமாதம் சிறிலங்கா அரசினால் மீண்டும் இழுத்து மூடப்பட்டது.
Wednesday, 19 August 2009
திருக்குறளில் முகாமைத்துவம்
பொதுவாக ஐந்து பணிகளை முகாமைத்துவத்துவத்தின் முக்கியக்கூறுகள் (Important functions) என்பர். அவையாவன.
திராவிட மொழிகள் - சில ஒப்புமைகள்
Tuesday, 18 August 2009
இருள்கவிழ்ந்த "கிழக்கின் உதயம்" வடக்கின் வசந்ததுக்கு" அரிய உதாரணம்
மகிந்த அரசின் இந்த முயற்சி உண்மையிலேயே மக்கள் நலனை நோக்காக உடையதா அல்லது பன்னாட்டு சமூகத்துக்கான போலி விளம்பரம் செய்யும் நோக்கத்தினை உடையதா என்பதை எடைபோடடறிவதற்கு மிகச்சிறந்த உதாரணமாக கிழக்கு மண்ணின் இன்றைய நிலமையை எடுத்துக்கொள்ளலாம்.
பொக்கிசம் - ஒரு பார்வை
Monday, 17 August 2009
அடைமழையால் அந்தரிக்கும் அகதிமுகாம் மக்கள்
தொடர்ந்து வாசிக்க...
-வானதி
உறுதியான முடிவுகளே உலகத்தமிழர்களுக்கான வழி
Sunday, 16 August 2009
மகிந்தவின் அரசியல் திருவிழாவாகியுள்ள மடுமாதா தேவாலயப் பெருநாள்
தொடர்ந்து வாசிக்க...
-முகிலன்
யாழ்ப்பாணம்,வவுனியா தேர்தல்கள்: ஒரு பார்வை
தமிழர் தாயகத்தில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கான மாநகரசபை தேர்தல்களை எதிர்வரும் ஓகஸ்ட் 8 ஆம் திகதி நடத்தப்போவதாக சிறிலங்கா தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஆளும் மகிந்த அரசு தனது ஏகோபித்த அரசியல் பலம் நாடெங்கும் பரந்துள்ளதை அறிவிப்பதற்கு துருப்புச்சீட்டாக இந்த தேர்தலை பயன்படுத்தவேண்டும் என்ற நோக்குடன் இந்த தேர்தலையும் பய்ன்படுத்தவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.
இதற்காக, அரசியல் கூட்டணிகள் - தேர்தல் வாக்குறுதிகள் என எத்தனையோ விடயங்களை மக்கள் மத்தியில் விதைத்துவிட்டு அறுவடைக்காக காத்திருக்கும் மகிந்த அரசுக்கு முண்டுகொடுப்பதற்கென, சில தமிழ் கட்சிகள் தமது கொள்கைகளை சிங்கள தேசியத்திடம் அடகுவைத்துவிட்டு மக்கள் முன்போய் வாக்குகேட்கவும் துணிந்துவிட்டன.
தீர்வு பேச முயன்ற தயானை தீர்த்துக்கட்டிய மகிந்த
சிறிலங்கா அரசின் இனவாத கொள்கைகளையும் இனஅழிப்பு போருக்கு நியாயப்பாடுகளையும் உலகெங்கும் பரப்புரைசெய்து வந்த ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் பிரதிநிதி தயான் ஜயதிலக மகிந்த சிந்தனையில் அடித்துச்செல்லப்பட்ட அடுத்த மனிதராக அவரது பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டுள்ளார்.
மகிந்த தலைமையிலான அரசு மேற்கொண்டுவந்த சகல நடவடிக்கைகளையும் ஏதோ ஒரு விதத்தில் நியாயப்படுத்தி உலக அரங்கில் அதற்கு ஆதரவு தேடிக்கொள்ளும் முயற்சியில் தயான் ஜெயதிலக சிங்களதேசத்தின் பிரசார பீரங்கியாக செயற்பட்டுவந்தார் என்றால் மிகையில்லை.
Friday, 14 August 2009
எம்மைப்பற்றி
ஈழநேசன் என்ற இந்த வலைச் சஞ்சிகை தன்னார்வ நோக்கில் ஒன்றிணைந்தவர்களால் நடத்தப்படுகிறது. இது எந்தவோர் அமைப்பினையோ குழுவையோ பிரதிநிதித்துவப் படுத்துவதில்லை.
தமிழில் முழுமையான வலைச் சஞ்சிகையொன்றை உருவாக்கும் நோக்குடன் தொடங்கப்பட்ட இத்தளம், ஆர்வமுள்ள அனைத்துப் படைப்பாளிகளுக்கும் களமாக அமையும். படைப்பாளிகளுக்கு தேவைப்படுமிடத்து ஊக்கதொகை வழங்கவும் எமது வலைச்சஞ்சிகை தயாராக இருக்கிறது. அவை தொடர்பான விபரங்களை எம்மோடு தொடர்புகொள்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
Thursday, 13 August 2009
உதயன்: உறுதியின் உறைவிடம்
யாழ். குடாநாட்டிலிருந்து வெளிவரும் உதயன் நாளிதழுக்கு ஊடகச் சுதந்திரத்தைப் பாதுகாத்தமைக்கான உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருது எந்த வகையிலும் உதயனுக்கு அங்கீகாரம் என்று கூறிவிட முடியாது. ஏனெனில், உதயன் நாளிதழின் சேவை என்பது அதற்கும் அப்பால் பல்லாயிரம் மடங்கு பெரியது. அதன் பணி பல்லாயிரம் மடங்கு துணிச்சல்மிக்கது. அதன் வளர்ச்சியும் பல்லாயிரம் மடங்கு விஸ்வரூபம் உடையது.
இத்துணை பெரிய வளர்ச்சியை அடைந்துள்ள உதயனின் கடந்த காலத்தைச் சற்றுத் திரும்பிப் பார்த்தால் அது நிச்சயம் - அது அன்றுமுதல் தமிழ்த்தேசியத்துக்காக ஓயாது குரல் கொடுத்த பெருமையைத் தன்னகத்தே கொண்டதாக இருக்கும். அதற்காக எத்தனையோ இடர்களைச் சந்தித்ததாக இருக்கும்.
Tuesday, 11 August 2009
இனி ஈழத்தின் ‘இதயம்’: புலம்பெயர்வாழ் இளையோரின் பலம்
சுமார் 25 ஆயிரம் மாவீரர்களின் அர்ப்பணிப்புடன் 30 ஆண்டு காலம் நடைபெற்ற தமிழீழ விடுதலைப்போராட்டத்தை உலகமயமாக்கி தமிழர்களின் அடையாளம் என்ன என்பதை உலகின் மூலை முடுக்கெங்கும் எடுத்துக்கூறி –
தமிழர்களின் வீரத்தினதும் தியாகத்தினதும் உச்சத்தை இன்னும் பல்லாண்டு காலம் இந்த உலகம் உச்சரிக்கும்வகையிலான ஓர் ஒப்பற்ற சூழ்நிலையை உருவாக்கி –
தமிழினத்தின் அடுத்த கட்டப்போராட்டத்தை அடுத்த சந்ததியினரிடம் ஒப்படைத்துள்ளார்கள் தமிழீழ விடுதலைப்புலிகள்.
புலம்பெயர்ந்து வாழும் இளம் தலைமுறை அந்தப்பொறுப்பினைப் பெற்றுக்கொண்டு அதனை மிகவும் பக்குவமாக – உணர்வுபூர்வமாக – தமக்கு தமது இனத்தின் தலைவன் இதுவரை காலமும் காட்டிய அந்தக் கொள்கை பிசகாத பாதையில் முன்னெடுத்துச் செல்வதற்கு திடசங்கற்பம் பூண்டுள்ளது.
Monday, 10 August 2009
தமிழிலக்கியம்
தமிழ் இலக்கியத்தின் காலத்தை வரையறுக்க இயலாது என்றாலும், ஏறத்தாழ 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.
தமிழ் இலக்கியத்தை, சங்ககால இலக்கியங்கள், சங்கம் மருவிய கால இலக்கியங்கள் மற்றும் தற்கால (பிற்கால) இலக்கியங்கள் என்று மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். பழந்தமிழகம், மூவேந்தர்களாகிய சேர, சோழ பாண்டியரின் ஆட்சியில் பசியும் பிணியும் இன்றிச் செழித்திருந்தபோது, சங்க இலக்கியங்கள் தோன்றின. அதிலும், பாண்டியர்கள் முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று மூன்று சங்கங்களை ஏற்படுத்தி, தமிழ் வளர்த்தனர்.
தொடர்ந்து வாசிக்க...
Saturday, 8 August 2009
அரங்கேறியது அடுத்த சதி: பத்மநாதன் கைது!
கடந்த 5 ஆம் திகதி புதன்கிழமை லண்டனிலிருந்து மலேசியாவுக்கு சென்றிருந்த விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களின் சகோதரர் மற்றும் நடேசனின் மகன் ஆகியோரை சந்திப்பதற்காக பத்மநாதன் அவர்கள் மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள மஜீத் இந்தியா என்ற இடத்தில் அமைந்துள்ள ரியூன் விடுதிக்கு சென்றிருந்துபோதே அவர் கடத்தப்பட்டார் என்று தெரியவருகிறது.
தொடர்ந்து வாசிக்க...
-முகிலன்