நிராயுதபாணிகளாக சிறிலங்கா அரச படைகளிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் பலர் சிறிலங்கா அரசின் புலனாய்வுப்பிரிவினாரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று சிங்கள ஊடகம் ஒன்று அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது. இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களில் விடுதலைப்புலிகளின் சமராய்வுப்பொறுப்பாளர் யோகி,பொருண்மியப்பொறுப்பாளர்களில் ஒருவரான கரிகாலன் உட்பட பல நூற்றுக்கணக்கான போராளிகள் அடங்குவர் என்றும் கொழும்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போர் உச்சக்கட்டத்தை அடைந்த கடந்த மே மாத காலப்பகுதியில் சிறிலங்கா அரசு தனது மிகக்கொடூரமான - மிருகவெறித்தனமான - நடவடிக்கைகளை தமிழ்மக்களின் மீது கட்டவிழ்த்துவிட்டிருந்தமை யாவரும் அறிந்தவிடயம். ஈற்றில் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு நிராயுதபாணிகளாக வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த விடுதலைப்புலிகளின் அரசியல்துறை தலைவர் பா.நடேசன் மற்றும் சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோரை சிறிலங்கா படையினர் மிகக்கொடூரமான முறையில் சுட்டுக்கொன்றனர். மொத்தத்தில் சர்வதேச போர் நியமங்களை அனைத்தையும் மீறிய படுபாதகங்களை அங்கு அரங்கேற்றியது.
தொடர்ந்து வாசிக்க...
-சேரன்
Wednesday, 26 August 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment