தாயகத்தில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தமிழ் தேசிய சக்திகள் இருமுனையில் போட்டியிடுகிறார்கள். தமிழ் தேசியத்தின் உறுதியான பற்றுதலில் பயணிக்கவேண்டும் என்ற வகையில் ஒரு தரப்பும் சர்வதேச சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக எமது போராட்டமும் பயணிக்கவேண்டும் என இன்னொரு தரப்புமாக இரண்டு எதிர்நிலைகளில் தமிழ் தேசிய சக்திகள் பயணிக்கின்றன என்பது யாவரும் அறிந்தவிடயம்.தமிழ் தேசிய சக்திகளின் போக்குகளையும் அதன் நிலைப்பாடுகளையும் ஆரோக்கியமான முறையில் விமர்சித்து அதன் சரியான நிலைப்பாடுகளை மக்கள் முன்னெடுத்து செல்வதே ஊடகங்களின் நிலைப்பாடாக இருக்கவேண்டும். ஆனால் இன்று சில ஊடகங்கள் ஒன்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்துக்களை மட்டும் முன்வைத்தோ அல்லது தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் கருத்தை மட்டும் முன்வைத்தோ அரசியல் செய்கின்றனர்.
நிகர சொத்து மதிப்பு (Net Asset Value) என்பது முதலீட்டு நிறுவனங்கள் பயன்படுத்தும் ஒரு அளவீடு. இது அவர்களது நிகர சொத்துக்களின் (Net Assets) அடிப்படையில் ஒரு முதலீட்டு அலகின் மதிப்பை (Unit Value) அளக்கப் பயன்படுகின்றது.
முன்னொரு காலத்தில் சீனாவில் ஒரு பெரிய வியாபாரி தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யார் வசம் ஒப்படைப்பது என்று தீர்மானிக்க அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தான். யார் அதிக அளவு சீப்புகளை புத்த மடாலயத்திற்கு விற்கிறார்களோ அவன் தான் தன் வியாபாரத்தை நிர்வகிக்கத் தகுதியானவன் என்று அறிவித்தான்.
பொதுவாகப் படகுகள் நீரின் அடியில் சுழலும் சுழலிகளின் (propeller) மூலமாகக் கிடைக்கும் உந்துவிசையின் மூலமாகவே உந்திச்செல்லப்படுகின்றன. ஆனால், நீருந்து விசைப்படகு நீர்த்தாரைகளைப் படகின் பின்னோக்கிப் பீய்ச்சியடிப்பதன் மூலம் நீர்ப்பரப்பின் மீது உந்துவிசையை உருவாக்குகின்றது. இதன்காரணமாக, நீருந்து விசைப்படகுகளில் சுழலிகளுக்குப் பதிலாக நீர்த்தாரைகளைப் பீய்ச்சியடிக்கும் இயந்திர அமைப்புக்கள் காணப்படும். ஆரம்பத்தில் வேகமாக ஓடும் மற்றும் ஆழம் குறைந்த நதிகளிற் பயன்படுத்துவதற்காக, நியூசிலாந்தைச் சேர்ந்த வடிவமைப்பாளரான சேர் வில்லியம் ஹமில்ற்றன் (Sir William Hamilton) என்பவரால் 1954 ஆம் ஆண்டில் நீருந்து விசைப்படகு வடிவமைக்கப்பட்டது.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகின்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டுள்ள குழப்பமான தடுமாற்றமான நிலைப்பாடுகளால் அனைத்து தமிழ் மக்களிடத்திலும் ஏமாற்றமான மனநிலை காணப்படுகிறது.
இறைவன் கொடுத்த உடல் உறுப்புக்கள் எல்லாம் நன்றாகவே இருந்தாலும், எதிர்மறைச் சிந்தனைகளை மனம் முழுதும் நிரப்பிக்கொண்டு எதையும் செய்யாமல் முடங்கிக்கிடப்பவர் பலர். சுண்டுவிரலில் சுளுக்கு ஏற்பட்டால்கூட உடன் இருப்பவர்களைக்கலங்க அடிப்பவர் பலர். இவர்களுக்கு மத்தியில் தனக்கு ஏற்பட்ட மிகக் கொடுமையான விபத்தில் இருந்து மீண்டெழுந்தது மட்டுமின்றி, தான் விபத்தில் அடிபட்டதையும் அதிலிருந்து மீண்டதையும் 'மகிழ்ச்சியான கதை' என்று கூறும் ஒரு வித்தியாசமான பெண் டேனியலா கார்சியா.
2010 நாடாளுமன்றத் தேர்தல் வழமையிலும் பார்க்க இந்த முறை பரபரப்பு மிக்கதாக நோக்கப்படுகின்றது. நடைபெறவுள்ள தேர்தலில் தமிழர் பிரதிநிதித்துவம் தொடர்பில் மாறுபட்ட வாதப்பிரதிவாதங்களும், மக்கள் முடிவெடுப்பதில் நெருக்கடிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதே போல சிங்கள தேசத்திலும் தேர்தல் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன.
நடைபெறப் போகும் தேர்தல் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் தமிழ்த்தேசியத்தின் ஒருமித்த செயற்பாட்டின் அடித்தளத்தையே தகர்த்துவிடும் என்ற ஆபத்து நிலை தற்போது இலங்கை அரசியல் களத்தில் உணரப்பட்டுள்ளது. தேர்தல் குறித்த முனைப்பு, கலந்துரையாடல்கள், உடன்பாடுகள், கருத்துவெளிப்பாடுகள், கருத்து மோதல்கள் என அரசியல் வட்டாரங்கள் மிகுந்த சுறுசுறுப்படைந்துள்ளன. இதன்போது உள்ளேயிருப்பவர்களை வெளியனுப்புதல் வெளியில் இருப்பவர்களை உள்ளே கொண்டுவருதல் என்ற அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் முயற்சி செய்கிறார்கள்.
உலகில் இருவகை நபர்கள் அடுத்தவரைப் பாராட்டுவது மிகவும் அபூர்வம். ஒன்று தாய். இன்னொன்று பக்தன். தாயிற்குத் தன் பிள்ளையை விட அதிகமாக இன்னொருவரை மெச்சும் மனம் வராது. அதே போல் பக்தனும் தன் கடவுளை விட அதிகமாக இன்னொருவரைப் புகழ்வது மிக மிக அபூர்வம். ஆனால் கம்ப இராமாயணத்தில் இந்த இரண்டு வகையினரும் அதைச் செய்திருக்கிறார்கள். இராமனைக் காட்டிலும் பரதன் சிறந்தவன் என்று மெச்சி இருக்கிறார்கள்.
இன்றுவரை புலத்து தமிழர்கள் வாழ்ந்துவரும் பல்வேறு நாடுகளில் தமிழீழ தனிநாட்டுக்கான மக்களாணையை பெற்றுக்கொள்ளும் நோக்கோடு நடத்தப்பட்டுவரும் தேர்தல்களும் அவற்றில் மக்களின் பங்களிப்பும் சர்வதேச அரசுகளினது கவனத்தை கவர்ந்துள்ளதுள்ளதுடன், சிறிலங்கா அரசையும் அச்சுறுத்த தொடங்கியுள்ள வேளையில், இவ்வாறான தேர்தல்களும் அவை சாதிக்கபோவது என்ன? என்ற வினாக்களும் அவசியமற்றவை தான்.
எதிர்வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இலங்கைத்தீவிலுள்ள பெரும்பாலும் அனைத்து தமிழ் கட்சிகளும் சிங்கள கட்சிகள் எவற்றுடனும் சேராது தனித்து போட்டியிடவுள்ளதாகவே இறுதியாக கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. நடந்துமுடிந்த அரச தலைவர் தேர்தல் மூலம் தமிழ் மக்கள் வெளிக்காட்டிய உணர்வின் வெளிப்பாடுகளின் விளைவுகளாகவே தற்போது தமிழ்க்கட்சிகள் எடுக்கின்ற முடிவுகளை நோக்கவேண்டும். அவை தொடர்பான அலசல்களாக விரிகின்றது இக்கட்டுரை.