Saturday 27 February 2010

நீருந்து விசைப்படகு (WaterJet Boat)

180px-Yamaha_SUVபொதுவாகப் படகுகள் நீரின் அடியில் சுழலும் சுழலிகளின் (propeller) மூலமாகக் கிடைக்கும் உந்துவிசையின் மூலமாகவே உந்திச்செல்லப்படுகின்றன. ஆனால், நீருந்து விசைப்படகு நீர்த்தாரைகளைப் படகின் பின்னோக்கிப் பீய்ச்சியடிப்பதன் மூலம் நீர்ப்பரப்பின் மீது உந்துவிசையை உருவாக்குகின்றது. இதன்காரணமாக, நீருந்து விசைப்படகுகளில் சுழலிகளுக்குப் பதிலாக நீர்த்தாரைகளைப் பீய்ச்சியடிக்கும் இயந்திர அமைப்புக்கள் காணப்படும். ஆரம்பத்தில் வேகமாக ஓடும் மற்றும் ஆழம் குறைந்த நதிகளிற் பயன்படுத்துவதற்காக, நியூசிலாந்தைச் சேர்ந்த வடிவமைப்பாளரான சேர் வில்லியம் ஹமில்ற்றன் (Sir William Hamilton) என்பவரால் 1954 ஆம் ஆண்டில் நீருந்து விசைப்படகு வடிவமைக்கப்பட்டது.


தொடர்ந்து வாசிக்க...

Friday 26 February 2010

கூட்டமைப்பைக் குலைத்த சம்பந்தர் மீண்டும் நிமிர்வாரா?


TNA-maveerar-illamநடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகின்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டுள்ள குழப்பமான தடுமாற்றமான நிலைப்பாடுகளால் அனைத்து தமிழ் மக்களிடத்திலும் ஏமாற்றமான மனநிலை காணப்படுகிறது.
தமிழ் தேசியத்தோடு கூட நின்ற அனைத்து தமிழ்ப்பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடி ஒற்றுமையாக இணைந்து செல்லவேண்டிய பொறுப்பிலிருக்கின்ற தமிழர் தரப்பானது ஏன் குழப்பமான நிலைமையை ஏற்படுத்தியது என்பதுதான் புரிந்துகொள்ளமுடியாமல் இருக்கிறது.

Thursday 25 February 2010

சாதனைப்பெண் டேனியலா கார்சியா

wheelchair-disabledஇறைவன் கொடுத்த உடல் உறுப்புக்கள் எல்லாம் நன்றாகவே இருந்தாலும், எதிர்மறைச் சிந்தனைகளை மனம் முழுதும் நிரப்பிக்கொண்டு எதையும் செய்யாமல் முடங்கிக்கிடப்பவர் பலர். சுண்டுவிரலில் சுளுக்கு ஏற்பட்டால்கூட உடன் இருப்பவர்களைக்கலங்க அடிப்பவர் பலர். இவர்களுக்கு மத்தியில் தனக்கு ஏற்பட்ட மிகக் கொடுமையான விபத்தில் இருந்து மீண்டெழுந்தது மட்டுமின்றி, தான் விபத்தில் அடிபட்டதையும் அதிலிருந்து மீண்டதையும் 'மகிழ்ச்சியான கதை' என்று கூறும் ஒரு வித்தியாசமான பெண் டேனியலா கார்சியா. 
தொடர்ந்து வாசிக்க...

தேர்தலும் தமிழர் தரப்புகளின் சவால்களும்


idp-issue2010 நாடாளுமன்றத் தேர்தல் வழமையிலும் பார்க்க இந்த முறை பரபரப்பு மிக்கதாக நோக்கப்படுகின்றது. நடைபெறவுள்ள தேர்தலில் தமிழர் பிரதிநிதித்துவம் தொடர்பில் மாறுபட்ட வாதப்பிரதிவாதங்களும், மக்கள் முடிவெடுப்பதில் நெருக்கடிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதே போல சிங்கள தேசத்திலும் தேர்தல் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன.
முதலில் சிங்களத் தரப்பினரின் தேர்தல் நகர்வுகளை மேலோட்டமாக நோக்குவோம். தென்னிலங்கையைப் பொறுத்தவரையில் மகிந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தனதாக்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக தேர்தல் களத்தில் குதித்துள்ளார்.

Tuesday 23 February 2010

கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 05


Pirabakaran-Anthathy-Padam-05
சிறப்பில்லாச் செய்கைதனைச் சீனரும் செய்வார்
இறப்பில்லா வாழ்வின் எழிலே! –உறப்பில்லா*ப்
பாகிசுத் தானியரும் பாழ்கருவி* தந்திடுவார்
ஏகியெமைக் கொல்வார் இவர்! (41)

உறப்பில்லாத –செறிவில்லாத; கருவி –ஆயுதம்.

இவரை அடித்தால் அவர்க்குவலி கூடும்;
தவிப்பார்; கொதிப்பார்; தடுப்பார்; –எவரும்
தமிழர்க்(கு) அரணாதல் தாவென்பார்* மீறி
எமக்கரண் ஆணாய் எழுந்து! (42)

களங்கள் - 4. ஓயாத அலைகள் மூன்று


அன்று (28/10/99) அதிகாலை மூன்று மணியளவில் கரும்புலிகளின் ஐந்து அணிகள் பயிற்சி நகர்வைத் தொடங்கின. அவர்களுக்கான ஆள்கூறுகள் கொடுக்கப்பட்டிருந்தன. இலக்கு நோக்கிய நகர்வை மக்களின் கண்களில் தட்டுப்படாமல் முடிக்க வேண்டுமென்பதும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
காலை ஆறு மணியளவில் எனக்கொரு பணி தரப்பட்டு குமுழமுனைக்கு அனுப்பி வைக்கப்பட்டேன். அங்கே ராஜு அண்ணையோடு ஈழவனும் இன்னும் சிலரும் வந்துசேர்ந்தார்கள். பின் அங்கிருந்து ஆண்டாங்குளம் செல்லும் பாதையில் சிறிது தூரம் சென்று வாகனங்களை விட்டுவிட்டுக் காட்டுக்குள் இறங்கினோம். கிட்டத்தட்ட ஒருமணிநேரம் அலைந்து திரிந்து இறுதியில் ஒரு வெட்டைப் பகுதியைத் தேர்ந்தெடுத்தோம். அது வயற்பகுதியோடு சேர்ந்த ஒரு வெட்டை. சற்று இடைவெளிகள் விட்டு ஐந்து நிலையங்கள் எனக்குக் குறித்துத் தரப்பட்டன. 
தொடர்ந்து வாசிக்க...

Friday 19 February 2010

கூட்டமைப்பின் ஆபத்தான பயணம் - வழிமறிக்கப் போவது யார்?

tna-in-turmoilநடைபெறப் போகும் தேர்தல் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் தமிழ்த்தேசியத்தின் ஒருமித்த செயற்பாட்டின் அடித்தளத்தையே தகர்த்துவிடும் என்ற ஆபத்து நிலை தற்போது இலங்கை அரசியல் களத்தில் உணரப்பட்டுள்ளது. தேர்தல் குறித்த முனைப்பு, கலந்துரையாடல்கள், உடன்பாடுகள், கருத்துவெளிப்பாடுகள், கருத்து மோதல்கள் என அரசியல் வட்டாரங்கள் மிகுந்த சுறுசுறுப்படைந்துள்ளன. இதன்போது உள்ளேயிருப்பவர்களை வெளியனுப்புதல் வெளியில் இருப்பவர்களை உள்ளே கொண்டுவருதல் என்ற அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் முயற்சி செய்கிறார்கள். 


தொடர்ந்து வாசிக்க...

ஆயிரம் இராமரும் இவனுக்கு இணையில்லை!

raminjungleஉலகில் இருவகை நபர்கள் அடுத்தவரைப் பாராட்டுவது மிகவும் அபூர்வம். ஒன்று தாய். இன்னொன்று பக்தன். தாயிற்குத் தன் பிள்ளையை விட அதிகமாக இன்னொருவரை மெச்சும் மனம் வராது. அதே போல் பக்தனும் தன் கடவுளை விட அதிகமாக இன்னொருவரைப் புகழ்வது மிக மிக அபூர்வம். ஆனால் கம்ப இராமாயணத்தில் இந்த இரண்டு வகையினரும் அதைச் செய்திருக்கிறார்கள். இராமனைக் காட்டிலும் பரதன் சிறந்தவன் என்று மெச்சி இருக்கிறார்கள்.








தொடர்ந்து வாசிக்க...

Thursday 18 February 2010

தமிழீழத்திற்கான புலத்து தமிழர்களின் ஆணை சாதிக்கப்போவது என்ன?


london-vigilஇன்றுவரை புலத்து தமிழர்கள் வாழ்ந்துவரும் பல்வேறு நாடுகளில் தமிழீழ தனிநாட்டுக்கான மக்களாணையை பெற்றுக்கொள்ளும் நோக்கோடு நடத்தப்பட்டுவரும் தேர்தல்களும் அவற்றில் மக்களின் பங்களிப்பும் சர்வதேச அரசுகளினது கவனத்தை கவர்ந்துள்ளதுள்ளதுடன், சிறிலங்கா அரசையும் அச்சுறுத்த தொடங்கியுள்ள வேளையில், இவ்வாறான தேர்தல்களும் அவை சாதிக்கபோவது என்ன? என்ற வினாக்களும் அவசியமற்றவை தான்.
ஆனாலும் இவ்வாறான மக்களாணையை பற்றிய புரிதல் தமிழர்கள் மத்தியில் தெளிவாக கொண்டுசெல்லப்பட்டிருக்கிறதா என்பதும் அவ்வாறான மக்களாணை அவசியம் தானா என்பது பற்றிய தெளிதல் ஏற்பட்டுள்ளதா என்பதும் அவசியமானது. இன்னும் பல நாடுகளில் தமிழீழ தனியரசிற்கான மக்களாணைக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சில முக்கிய விளக்கங்களை தருவது பொருத்தமானது என கருதுகின்றோம்.

இலங்கையில் இரு தேசங்கள்: இடித்துரைக்கும் தமிழ்க்கட்சிகளின் தனிவழிப்பயணங்கள்


sri-lanka-elections-mahindaஎதிர்வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இலங்கைத்தீவிலுள்ள பெரும்பாலும் அனைத்து தமிழ் கட்சிகளும் சிங்கள கட்சிகள் எவற்றுடனும் சேராது தனித்து போட்டியிடவுள்ளதாகவே இறுதியாக கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. நடந்துமுடிந்த அரச தலைவர் தேர்தல் மூலம் தமிழ் மக்கள் வெளிக்காட்டிய உணர்வின் வெளிப்பாடுகளின் விளைவுகளாகவே தற்போது தமிழ்க்கட்சிகள் எடுக்கின்ற முடிவுகளை நோக்கவேண்டும். அவை தொடர்பான அலசல்களாக விரிகின்றது இக்கட்டுரை.
கடந்த அரச தலைவர் தேர்தலில், கணிசமான மக்கள் தேர்தலில் பங்குபற்றாத நிலை காணப்பட்டாலும், பங்குபற்றிய தமிழ் பேசும் மக்கள், மகிந்தவுக்கு எதிராக வாக்களித்துள்ளமை, சிறிலங்கா அரசியலில் தமிழ் பேசும் கட்சிகளின் நிலைப்பாடுகளை அசைக்கதொடங்கிவிட்டன.

காபி கற்றுத்தரும் பாடம்

coffeeeநளினி உள்ளே நுழையும்பொழுதே அம்மாவிற்குப் புரிந்துவிட்டது, இன்றும் அலுவலகத்தில் ஏகப்பட்ட பிரச்னைகள் நடந்திருக்கின்றன என்று. நளினி ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மனிதவள முகாமையாளராக சில நாட்களுக்கு முன்புதான் பணியில் சேர்ந்தாள். சமீப காலமாக, அங்கு ஏராளமான நிர்வாகக் கோளாறுகள், குழப்பங்கள், எக்கச்சக்க நெருக்கடிகள். புதிதாகச் சேர்ந்த நளினிக்கு அவற்றை தினம் தினம் எதிர்கொள்வது பெரும் சோதனையாக இருந்தது. தன்னுடைய பதட்டம், சலிப்பு எல்லாவற்றையும் அம்மாவிடம் சொல்லிப் புலம்புவது வாடிக்கையாகிவிட்டது அவளுக்கு. இன்றும் அப்படித்தான். 'சோதனைகளை எதிர்கொள்ளாமல் சாதனைகள் இல்லை' என்று நளினிக்குப் புரியவைத்தாக வேண்டும் என்று தோன்றியது அவள் அம்மாவிற்கு.

தொடர்ந்து வாசிக்க...

Monday 15 February 2010

அன்பால் இணைவோம்

crocodile2செல்லப் பிராணிகள் பலருக்கு இருப்பதுண்டு. ஆனால் கோஸ்டா ரிகாவைச் சேர்ந்த சிடோ (Chito)  என்றழைக்கப்படும் கில்பர்ட்டோ ஷெட்டென்Gilberto Shedden என்ற மீனவனுக்குச் செல்லப் பிராணி எது தெரியுமா? பதினேழு அடி நீளமுள்ள ஒரு முதலை தான். 52 வயதான சிடோ தண்ணீரில் அந்த பெரிய முதலையுடன் கட்டிப் பிடித்து விளையாடுவது கண் கொள்ளாக் காட்சி.


தொடர்ந்து வாசிக்க...

B-52 குண்டுவீச்சு விமானம்


300px-Usaf.Boeing_B-52குண்டுவீச்சு விமானங்களின் நீண்ட வரலாற்றுப் பயணத்தில் அவை காலத்திற்குக் காலம் நவீன தொழிநுட்பங்களை உள்வாங்கி புதிய வினைத்திறனுடன் வளர்ச்சியடைந்து வந்துள்ளன. இந்த வகையில் அமெரிக்க விமானப்படையாற் பயன்படுத்தப்படும் B-52 வகைக் குண்டுவீச்சு விமானம் மிக நவீன தொழிநுட்பங்களை உள்ளடக்கிய ஒரு விமானமாகும். 1955 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்க விமானப்படையின் சேவையில் உள்ள இவ்வகைக் குண்டுவீச்சு விமானங்கள் காலத்திற்குக் காலம் விருத்திசெய்யப்பட்டு நவீன தொழிநுட்பங்கள் உட்புகுத்தப்பட்டு நவீனமயப்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வகை விமானத்தின் ஆரம்ப வடிவம் ஆறு சுழலி இயந்திரங்களைக் (turbo propeller) கொண்டிருந்த போதிலும் நவீன வடிவங்கள் தாரை இயந்திரங்களைக் கொண்டிருக்கின்றன.

Friday 12 February 2010

நாட்டுப்பற்றாளர் ஊடகர் பு. சத்தியமூர்த்தி


sathiyamoorthyஒரு இனத்தின் அடையாளம் ஊடகம் என்பார்கள். அந்த ஊடகத்தை நிர்வகிக்கின்ற அல்லது அதனைப் பிரதிபலிக்கின்ற ஒப்பற்ற பணிதான் இனத்தினைப் பிரதிபலிக்கும். இந்த இலக்கணத்திற்கு வடிவம் கொடுக்க முனைந்து தன்னாலான பணியினை ஒப்பேற்றி இடை நடுவே பிரிந்த ஊடகர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தி உலகில் இருந்து பிரிக்கப்பட்டு 22-02-2010 உடன் ஓராண்டு பூர்த்தி கொள்கின்றது.
தனக்கான பாதை எது தனக்குப் பொருத்தமான பணி என்ன என்பதை நன்கு பகுத்துணர்ந்தே சத்தியமூர்த்தி ஊடகம் என்னும் கருவியைத் தனதாக்கிக் கொண்டார். ஆரம்பத்தில் எழுத்தின் மீதான உந்துதலால் அல்லது ஈர்ப்பினால் அவர் தனது ஊடகப் பணியினை தொடங்கினார்.






"எதிர்கொள்ளுதல்" (சிறுகதை)


Eathirkolluthallகொழும்பு  இரத்மலானை 'எயாப்போட்'டிலிருந்து விமானம் மேலெழும்புகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு வடபகுதிக்கு பிளேன்  வெளிக்கிடுகின்றது.

"அக்காவிற்குக்  கடுமை. ஒருக்கா வந்து பாத்துவிட்டுப் போனால்  நல்லது."

இவ்வளவும்தான் கடிதத்தில இருந்தது. இத்தனை காலத்தில  அத்தான் எனக்கு ஒருபோதும் கடிதம் போட்டதில்லை. என்னவென்றாலும் அக்காதான் போடுவா. அத்தான் எழுதின கடிதத்தின்ர சுருக்கத்தில இருந்து நிலமையைப் புரிஞ்சு கொண்டன். அக்காவின் கடைசிப் பக்கங்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

கடிதம் கிடைச்ச மூண்டு நாளைக்குள்ள அவுஸ்திரேலியாவிலிருந்து வெளிக்கிட்டு சிறீலங்கா வந்திட்டன். வடபகுதி நிலமையள் மிக மோசமா இருந்தன. நாலு கிழமையா பலாலிக்கான விமானப் போக்குவரத்து நடக்கேல்லை. வடபகுதி முற்றாக ஏனைய பகுதிகளிலையிருந்து துண்டிக்கப்பட்டிருந்தது.

பொன்சேகா கைது: அமெரிக்க ஆசிய பிராந்திய சக்திகள் முறுகல் வெளிப்பாடு

fonseka_rajapakse_vaharaiநீதி வேண்டிநிற்கும் உலகில் மற்றோர் நீதி அரங்கேற்றம் பெற்றுள்ளது. ஆனால் அந்த நீதி மற்றொரு அநீதியால் அரங்கேற்றப்பட்டுள்ளமை தான் வித்தியாசமானது. தமிழின அழிப்பினை மேற்கொண்ட ஓரங்க நாடகத்தின் பிரதான வில்லன்களில் ஒரு வில்லன் மற்றொரு வில்லனால் அழிக்கப்பட்ட அல்லது சிறையெடுக்கப்பட்ட கதைதான் பொன்கேசா கைது.

விடுதலைப் போராட்டத்தின் இறுதிப் பகுதியில் ஒப்பேற்றப்பட்ட தமிழின அழிப்பின் கூரிய வாள் பொன்சேகாவிடமே இருந்தது. அந்த வாள் கண்ணை மூடி வீசப்பட்ட பொழுது வீழ்ந்த தலைகள் ஆயிரம் என்றால் அந்தத் தலைக்குச் சொந்தமான பல்லாயிரம் கண்களின் கண்ணீர்களின் சாபத்திற்கு அவரும் அவரது அன்றைய தலைவர் மகிந்தராஜபக்சவும் உட்பட்டிருந்தனர்.





தொடர்ந்து வாசிக்க...

Thursday 11 February 2010

நாவினால் சுட்ட வடு

harsh-wordஐந்தாம் வகுப்பில் படிக்கும் இளங்கோ, மிகுந்த முன்கோபி. எப்பொழுது பார்த்தாலும் யாருடனாவது சண்டை பிடித்துக்கொண்டு, யாரையாவது திட்டிக்கொண்டு இருப்பதுதான் அவன் வழக்கம். உப்புப்பெறாத காரணங்களுக்காக அவன் கோபமும், சண்டையுமாக இருப்பதால் அவனுக்கு நண்பர்களே இல்லை, பள்ளியிலும் ஆசிரியர்களிடம் அவனுக்குக் கெட்ட பெயர்தான். இதன் காரணமாக அவனும் எப்பொழுது பார்த்தாலும் வருத்தத்தில் இருந்தான். கோபமும் துயரமுமான மனநிலையிலேயே அவன் இருந்ததால் அவனால் சரிவரப்படிப்பிலும் கவனம் செலுத்த இயலவில்லை, விளையாட்டுக்களிலும் அவனைச் சேர்த்துக்கொள்ள யாரும் விரும்பவில்லை.

தொடர்ந்து வாசிக்க...

Tuesday 9 February 2010

கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 03


Pirabakaran-Anthathy031
இயன்றுநீ செய்கின்ற இன்னமைதி தன்னை
முயன்று கெடுப்பார் முனிந்தே!* – தியங்கா(து)*
அவர்க்குநற் பாடம் அருள்கின்ற கோனே!
தவிக்குமெமைத் தாங்கித் தழுவு! (21)

தழுவிடினும் சாவை தமிழீழம் காக்க
எழுவரெம் மல்லர்* இனிதே – உழுவக்
கொடி*தாங்கி ஈழத்தில் கோல்நடுவர் அஃதை
மடிதாங்கி நிற்போம் மகிழ்ந்து! (22)


தொடர்ந்து வாசிக்க...

கடுங்கோட்பாடும் ‘கால் பிடி’ வைத்தியமும் !


karuna-douglas-kishore
சென்ற பெப் 4 ந் தேதிக்குப்பின், இலங்கையில் இருந்து வெளியாகிய எல்லாப் பத்திரிகைகளிலும் அந்நாட்டின் அதிபர் கண்டி மாநகரில் ஆற்றியிருந்த உரை குறித்த விபரங்களும்,அதுபற்றிய ஆசிரியத் தலையங்கங்களும் வெளியாகியிருந்தன.
இலங்கையில் எந்தக் கட்சி அரசு அமைத்தாலும், அந்த அரசுக்குச் சாதகமான செய்திகளையும், அதன் திட்டங்களை ஆதரித்து தலையங்கங்களைத் தீட்டுவதிலும் ‘லேக் ஹவுஸ்’ நிறுவனத்துக்குச் சொந்தமான தமிழ்-ஆங்கில-சிங்கள ஏடுகள் என்றும் பின்னிற்பதில்லை. ஒருவகையில் அரசின் ‘ஊதுகுழல்’களாகச் செயல்படும் இப்பத்திரிகைகள் இந்த முறையும் தங்கள் கடமையினைச்(?) செவ்வனே நிறைவேற்றியிருக்கின்றன.

3 இடியட்ஸ் திரைவிமர்சனம்

3-idiotsஅனைவருமே வெற்றிக்கான  பாதையில் தான் செல்ல விரும்புகிறோம். ஆனால் வெற்றியை குறிக்கோளாகக்  கொண்டு செயல்படுகிற போது போட்டி, பொறாமைகள், பிரச்சனைகள், தோல்விகள், மனக்கசப்புகள்  என்று படிப்படியாக பல தடைகளும் துன்பங்களும் நேரிடுகிறது. வெற்றியின் பின்னால் ஓடாமல்  ஒரு நல்ல செயலை எடுத்துக்கொண்டு நல்ல திட்டமிடுதலும் அதை சரியான வழியில் செயல்படுத்தலும் வெற்றியை தன் பின்னால் ஓடிவரச் செய்யக்கூடியதாக மாற்றுவதும் ஒரு புத்திசாலியின் வழியாகும்.


தொடர்ந்து வாசிக்க...

Monday 8 February 2010

மகிந்தவின் போர்வாள் புலம்பெயர் தமிழர் மீது ஏவி விடப்பட்டுள்ளது


20060530-torontorally-optimizedதேர்தல் முடிவடைந்த பின்னர் முதன்முதலாக தமிழரின் பண்பாட்டுத் தலைநகரான யாழ்ப்பாணத்திற்குச் சென்ற வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம, அங்கு அரசாங்கம் பல அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்தார்.  அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு புலம்பெயர் தமிழர் தங்களது ஆதரவை நல்க வேண்டுமெனவும் வெளிவிகார அமைச்சர் யாழ் நூலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் அறிவித்தார்.
ஜனவரி 30 , 2010 அன்று திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டு யாழ் சென்ற அவர் நல்லூர் கந்தசாமி கோவில் சென்று வழிபட்ட பின்னர் யாழ் நூலகம் சென்ற அவர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்திய பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்து யாழ்ப்பாணத்தில் அரசு உத்தேசித்துள்ள வேலைத்திட்டங்களை அறிவித்தார்.
அவரின் அறிவிப்புக்களில் முக்கியமானது இரண்டு விடயங்கள்:

Sunday 7 February 2010

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அடுத்த நகர்வு என்ன?


tna-meeting-with-ltte-smallமீண்டுமொரு தேர்தல் முனைப்புக்களுக்கான தளம் திறக்கப்பட்டுள்ளது. ஆரசியல் களத்தில் நான் முந்தி நீ முந்தி என கூட்டணிகளும், கருத்து வெளிப்பாடுகளும் தலை தூக்கத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் சரியான கேள்விகளுக்கான சரியான பதில்களை வழங்க வேண்டிய சூழலில் தமிழ் அரசியல்த் தலைவர்கள் இருக்கின்றார்கள்.
நாளுக்கு நாளான அரசியல் மாற்றத்தின்படியான மாறுதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு உறுதியான முடிவினை வெளிப்படுத்த வேண்டிய ஒரு கட்டத்தில் தற்போது களத்தில் உள்ளது. கூட்டமைப்பு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில் இன்று முக்கிய இடத்தினை வகிப்பது. கூட்டமைப்பு தொடர்பிலான மக்கள் சந்தேகங்களை நிவர்த்திப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை கூட்டமைப்பு எடுக்க வேண்டியதாகும்.

Friday 5 February 2010

Hypersonic விமானம்

200px-X-43A_Hyper_-_X_Mach_7_computational_fluid_dynamic_CFDவிமானவியற் தொழிநுட்பத்தில், ஒலியின் வேகத்திலும் ஐந்து மடங்கு அதிகமான வேகத்திற் பயணிக்கவல்ல விமானங்கள் hypersonic விமானங்கள் என்றழைக்கப்படுகின்றன. சாதாரண தாரை இயந்திரங்களின் (jet engines) மூலம் ஒலியின் ஐந்து மடங்கு வேகத்தினைப் பெறுவதென்பது இலகுவான காரியமில்லை. இதன் காரணமாக இவ்வகை விமானங்களுக்கு, அடிப்படையில் ramjet இயந்திரத்தின் தத்துவத்தில் இயங்கினாலும், அதனைவிட அதிகளவாக உந்துசக்தியைப் பிறப்பிக்கவல்ல scramjet இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.


தொடர்ந்து வாசிக்க...

பழங்களை உண்ணும் முறை


how-to-eat-fruitபழங்களை சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் எப்போது எப்படி உண்பது என்பது பற்றி சிந்திப்பதில்லை. பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட்டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்.
பழங்களை எப்போது எப்படி எப்போது உண்ணவேண்டும் என அறிந்துகொள்வது முக்கியமானது. பழங்களை சாப்பிடுவதற்கான சரியான வழிமுறை என்ன? இது தொடர்பான மின்னஞ்சல் ஊடாக பரிமாறப்பட்ட தகவலை அடிப்படையாக வைத்து விளக்கம் அளிக்கலாமென எண்ணுகின்றேன்.
தொடர்ந்து வாசிக்க...

Thursday 4 February 2010

ஜோஹாரி சாளரம்

தன்னைத் தானே அறிவதன் முதல் படியான SWOT Analysis குறித்து இப்பகுதியில் கண்டோம். சுயபரிசோதனையையும், சுயமுன்னேற்றத்தை ஊக்குவிக்கும் இன்னொரு முறைதான் ஜோஹாரி சாளரம் (JOHARI Window). தன்னைத் தான் அறிந்து கொள்வதோடு நின்று விடாமல், குழுவினர் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும்கூட உதவி புரிவது இந்த உருமாதிரி(Model).

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த உளவியல் மருத்துவர்களாகிய ஜோசப் லுஃப்ட் மற்றும் ஹாரி இங்காம் ஆகிய இருவராலும் உருவாக்கப்பட்ட மாதிரி(Model)ஆகிய இது இருவருடைய பெயர்களையும் தாங்கி 'ஜோஹாரி சாளரம்' என்று பெயரிடப்பட்டது. இக்கட்டமைப்பினை 'தன்னுணர்வுக்கான வெளிப்பாடு மற்றும் பின்னூட்ட மாதிரி' (Disclosure/Feedback )

Wednesday 3 February 2010

தடங்கள் -5. ஓயாத அலைகள் -3. பகுதி 2



இது 1999 ஆம் ஆண்டின் புரட்டாசி மாதம். கரும்புலிகள் அணியின் மூன்றாம் தொகுதியும் அதற்குரிய நிர்வாகமும் வேறோர் இடத்திலிருந்து கடற்பயிற்சிக்காக முல்லைத்தீவின் கள்ளப்பாடு என்ற கடற்கரைக் கிராமத்துக்கு நகர்ந்திருந்தது. இங்கே கரும்புலிகள் அணி எனப்படுவது தரைக் கரும்புலிகள் அணியைக் குறிக்கும். பொதுவாக கடற்கரும்புலிகளை ‘கடற்கரும்புலிகள்’ என்றும், தாயகப்பகுதிக்கு வெளியேயோ உள்ளேயோ இயக்கத்தால் உரிமை கோரப்படாத தற்கொடைத் தாக்குதல் நடத்தும் அணியை ‘மறைமுகக் கரும்புலிகள்’ என்றும், மற்றவர்களை ‘கரும்புலிகள்’ என்றும் அழைப்பதுண்டு. இந்தத் தரைக்கரும்புலிகள் அணி இம்ரான்-பாண்டியன் படையணியின் நிர்வாகத்தின் கீழ் ஓரணியாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தது.

Tuesday 2 February 2010

கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 02


Pirabakaran-Anthathy02










பாரில் நினைப்போல் படைநடத்தக் கற்றவர்யார்?
போரில் புகழ்நாட்டும் பொன்முடியே! –காரில்*
மின்போலும் ஊடுருவி வெற்றிக் கனிபறிக்க
உன்போலும் ஆமோ உரை! (11)

உரைக்கப் புகுந்தால் உணர்ந்துன் புகழைக்
கரைக்குள் அடங்காக் கடலாய் –விரியும்;
தனைநிகர்த் தோனே! தரிசித் ததுண்டோ
உனைநிகர்த் தோனை உலகு! (12)

உண்மையான தலைவன்


true-leader1அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்த சமயம் அது. அப்போது ஜனாதிபதியாக இருந்த ஆப்ரகாம் லிங்கன் போரில் காயமடைந்து சிகிச்சை பெறும் சிப்பாய்களைக் காண அடிக்கடி மருத்துவமனைகளுக்குச் செல்வார். மருத்துவர்களிடம் அவர்களுடைய உடல்நல முன்னேற்றத்தைக் கேட்டு அறிந்து கொள்வார்.
அப்படி ஒரு முறை ஒரு மருத்துவமனைக்கு வந்து மருத்துவர்களிடம் பேசிய போது ஒரு மருத்துவர் ஒரு சிப்பாய் மரணத் தறுவாயில் இருப்பதாகச் சொன்னார். உடனே ஆப்ரகாம் லிங்கன் அந்த சிப்பாயின் அருகில் சென்று அமர்ந்தார். உற்றார் உறவினர் யாரும் அருகில் இல்லாமல் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் அந்த சிப்பாயிடம் ஆப்ரகாம் லிங்கன் “உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமா?” என்று கேட்டார்.

Monday 1 February 2010

தமிழர் தேசத்தில் தோற்கடிக்கப்பட்ட சிங்கள தேசத்தின் அரச தலைவர்

tamil-diasporaதற்போது இலங்கைத்தீவில் நடந்துமுடிந்த தேர்தல், அங்கு வாழும் சிறுபான்மை இனங்களின் உரிமைகளை எவ்வாறு சிறிலங்கா என்ற நாட்டுக்குள் பாதுகாத்துக் கொள்ளமுடியும் என்ற வினாவை மீண்டும் எழுப்பி நிற்கின்றது. அத்துடன் தமது ஆட்சிக்கதிரைக்காக தமிழர்களை எவ்வாறு அடக்குகிறார்கள் என்பதை வெளிக்காட்டும் இன்னொரு சாட்சியாகவும் அத்தேர்தல் முடிந்திருக்கிறது.








தொடர்ந்து வாசிக்க...

எறிபாதை ஏவுகணை (Ballistic Missile)

250px-Trident_II_missile_imageமிகத் தொலைதூர இலக்குக்களை நோக்கி உயர் புவிச்சுற்றுவட்டப்பாதைவழியே வழிநடாத்தப்பட்டு இலக்குகளைத் தாக்கியழிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஏவுகணையே எறிபாதை ஏவுகணை (Ballistic Missile) என்றழைக்கப்படுகின்றது. இவ்வகை ஏவுகணைகள் எறிபாதை ஏவுகணை என்று அழைக்கப்படுவதன் காரணம் இவை ஒரு எறியப்பாதையினூடாகவே பயணிக்கின்றன. இவ்வகை ஏவுகணைகள் கிடைப்பறப்பை மேற்கொள்வதில்லை. சாதாரணமாக பந்து ஒன்றையோ அல்லது வேறொரு பொருளையோ எறியும்போது அது எவ்வாறு ஒரு எறியப்பாதையில் பயணிக்கின்றதோ, அவ்வாறே எறியப்பாதை ஏவுகணைகளும் பயணிக்கின்றன.














தொடர்ந்து வாசிக்க...