Saturday 2 January 2010

மாறுங்கள், மாற்றுங்கள்

noone-careமாற்றம் ஒன்றுதான் மாற்றமில்லாதது என்பது பொன்மொழி. நேற்றுபோல் இன்று இல்லை, இன்று போல் நாளையில்லை. ஒவ்வொரு நாளும் உலகம் ஒரு புதிய மாற்றத்தைக் கண்டு வருகிறது. ஆதிமனிதன் முதலில் இலைகளை உடுத்தத்தொடங்கியது முதல், இன்றைய கணிணி யுகம் வரை, வாழ்க்கை முறைகளில், வியாபாரங்களில், தகவல் பரிமாற்றங்களில், சுற்றுப்புறச் சூழலில் எத்தனை எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இந்த மாற்றங்களுக்கு ஏற்ப, தம்மைத் தகவமைத்துக்கொள்ளாத எதுவும் நிலைத்திருக்க முடிவதில்லை. இந்த மாற்றங்களுக்கு ஏற்ப மாறாத உயிரினமான டைனோசர், எத்தனையோ பெரியதாக இருந்தும், சுத்தமாக அழிந்து விட்ட உயிரினமாகி விட்டது. சூழலுக்கேற்ப தம்மைத் தகவமைத்துக்கொள்ளும் கரப்பான்பூச்சிகளை எத்தனை பூச்சிக்கொல்லிகள் வந்தும் அழிக்க இயலவில்லை. இன்று பெங்குயின்கள் கூட மெள்ளமெள்ளப் பறக்கத் துவங்குவதாக ஒரு பிபிசி நிகழ்ச்சியில் பார்த்தோம்.


தொடர்ந்து வாசிக்க...

No comments:

Post a Comment