சிறிலங்காவில் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் நடவடிக்கையாக தொடர்ந்து இடம்பெற்றுவந்த ஊடகவியலாளர்கள் மீதான அரச பயங்கரவாதத்தின்,பின்னைய சம்பவமாக தமிழ் ஊடகவியலாளர் திசநாயகம் அவர்களுக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது.
நாட்டில் பயங்கரவாதத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகையிலான கட்டுரைகள் அடங்கிய “நோர்த் ஈஸ்டெர்ன் கெரால்ட்” எனப்படும் ஆங்கில சஞ்சிகையை எழுதி அச்சிட்டு வெளியிட்டதைற்காக ஐந்து வருட கடூழிய சிறையும் –
பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்து சஞ்சிகை நடத்தியதன் மூலம் பணம் பெற்றுக்கொண்டமைக்காக ஐந்து வருட கடூழிய சிறைத்தண்டனையும் –
இவ்வாறான ஒரு சஞ்சிகையை வெளியிட்டதன் மூலம் சமூகங்களின் உணர்வுகளுக்கு பங்கம் விளைவித்தமைக்காக பத்து வருட கடூழிய சிறைத்தண்டனையும் –
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கொழும்பு நீதிமன்றினால் தீர்க்கப்பட்டிருக்கிறது.
தொடர்ந்து வாசிக்க...
-சேரன்
Friday, 18 September 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment