வரவு 100 ரூபாயாக இருந்தாலும் அதில் 99 ரூபாய் செலவு செய்பவர்கள் நிம்மதியாக இருக்கலாம். வரவு ஒரு லட்சம், செலவோ ஒரு லட்சத்து பத்தாயிரம் என்று இருப்பவர்கள் வாழ்க்கை எப்படி நிம்மதியாக இருக்க முடியும்? இன்றைய உலகில் ஆடம்பரத் தேவைகளுக்காகக் கடனின் பிடியில் சிக்கி அவதிப்படுபவர்கள் ஏராளம். கடனே வாங்காமல் வாழ்க்கை நடத்த முடியுமானால் அது உத்தமம். ஆனால், வீடு வாகனம் போன்றவற்றை, கடனுதவி இல்லாமல் பெறுவது மிகக் கடினம். அளவுடன் செலவு செய்து, அளவாகக் கடன் வாங்கித் திருப்பிக் கட்டுவோமானால், வாழ்க்கை நமது கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். இல்லையெனில், மிகக் கடினம். இது பற்றிக் கூற வரும் திருவள்ளுவரோ
'அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாதாகிக் கெடும்' என்கிறார். அதாவது தமது வரவு என்ன செலவு என்ன என்று அறியாமல் வாழ்பவர்கள், அளவுக்கு மிஞ்சிச் செலவு செய்பவர்களது வாழ்க்கை, நன்றாக இருப்பது போல் இருக்கும், ஆனால் திடீரெனக் காணாமல் போய்விடும் என்பது இதன் பொருள்.
தொடர்ந்து வாசிக்க...
-பாலகார்த்திகா
Saturday, 3 October 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment