இன்று அமெரிக்காவின் பங்குச்சந்தையை, தவறு - அமெரிக்காவையே உலுக்கிக்கொண்டிருப்பது கல்லியான் ஹெட்ஜ் ஃபண்ட் (Galleon Hedge Funds) நிறுவனர் திரு ராஜ் ராஜரத்தினம் என்பவரும் மேலும் ஐந்து நபர்களும் செய்ததாகக் கூறப்படும் ஏறத்தாழ 20 மில்லியன் டாலர் அளவுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பங்குச்சந்தை தொடர்பான மோசடி. இவர்கள் மீது பிற நிறுவனங்களின் அந்தரங்கமான தகவல்களைத் திரட்டி, அந்தச் செய்திகளைப் பயன்படுத்தி மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனை Insider Trading என்பர். இதனைத் தமிழில் 'உள்ளிருப்போர் வர்த்தகம்' எனக் கூறலாம்.
உள்ளிருப்போர் வர்த்தகம் அதாவது Insider Trading என்றால் என்ன? அதைக்குறித்து, இந்தப் பங்குச்சந்தைப் பகுதியில் கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.
-பாலகார்த்திகா
No comments:
Post a Comment