இரவு, வீட்டு வாசலில் கட்டிலைப் போட்டுக்கொண்டு படுத்திருக்கும் தாத்தா அல்லது அப்பாவின் பக்கத்தில் ஒட்டிக்கொண்டு, மினுமினுக்கும் நட்சத்திரங்களையும், நிலாவையும் பார்த்தவாறு கதை கேட்ட அனுபவம் உண்டா? நட்சத்திரம் ஏன் மின்னுகிறது, நிலா ஏன் தேய்கிறது, நிலாவுக்குள் எப்படிப் போய் ஒரு பாட்டி வடை சுடுகிறாள் அல்லது முயல் எப்படி அவ்வளவு தூரம் போயிற்று என்ற ஏராளமான கேள்விகளுக்கு விதம் விதமாய் சுவையான பதில்களும் கதைகளும் பதிலாகக் கிடைத்த இளம்வயது நினைவுகள் இன்னும் இனிக்கின்றன நமக்கு.
ஆனால், நம் இன்றைய சந்ததியினருக்கு அந்தப் பரிசை நாம் வழங்கவில்லை என்பது வருத்தமான உண்மை. நம் தலைமுறை, பேராசையுடன் இயற்கையை முரட்டுத்தனமாகக் கசக்கிப் பிழிகிறது.
தொடர்ந்து வாசிக்க...
-பாலகார்த்திகா
Tuesday 10 November 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment