இணையத்தில் மேய்ந்து கொண்டிருக்கையில் ஒரு சிறிய கதை கண்ணில் பட்டது. ஒரு சிறுவன், "அப்பா, கொஞ்ச நேரம் என்னுடன் விளையாட வாருங்கள்" என்று தன் தந்தையிடன் கேட்கிறான். தந்தை சொல்கிறார்" எனக்கு உன்னுடன் விளையாட எல்லாம் நேரம் ஒதுக்க முடியாது. என் ஒவ்வொரு நிமிடமும் மதிப்புடையது". சிறுவன் விடவில்லை. "அப்பா! நீங்கள் ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு சம்பாதிப்பீர்கள்?". 'உன் தாய் கூட இப்ப்டிக் கேட்டதில்லை. உனக்கு எதற்கு இந்த விவரம்?" என்றார் தந்தை. "தயவு செய்து சொல்லுங்கள்" என்று நச்சரிக்கிறான் மகன். "ஒரு மணி நேரத்தில் நான் இருபது டாலர் சம்பாதிப்பேன்", கர்வத்துடன் சொல்லிவிட்டு தந்தை தன் வேலையில் மூழ்கிவிடுகிறார்.
தொடர்ந்து வாசிக்க...
-பாலகார்த்திகா
Monday 30 November 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment