Thursday 20 August 2009

பாதை திறப்பின் ஊடாக அரசின் விளம்பரமும் வியாபாரமும்

தமிழர் தாயகத்தின் வடக்குப் பெருநகரான யாழ்ப்பாணத்தினை தென்னிலங்கையுடன் இணைக்கும் ஏ-9 வீதியை மீளத்திறந்துள்ள சிறிலங்கா அரசு, அதனை தேர்தல் கருப்பொருளாக வைத்து குடாநாட்டு மக்களின் வாக்குகளை வேட்டையாடும் பாரிய திட்டத்துடன் களமிறங்கியிருக்கிறது.

இனப்பிரச்சினையின் உஷ்ணம் ஆயுதப்போராட்டத்தின் ஊடாக வெடித்த காலப்பகுதியில் - 1984 ஆம் ஆண்டில் - தமிழர்தாயகத்துக்கான மிகமுக்கியமான நெடுஞ்சாலையான ஏ-9 வீதியை சிறிலங்கா அரசு இழுத்து மூடியது. சுமார் 18 வருடங்களின் பின்னர், சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி 15 ஆம் திகதி இப்பாதை மீண்டும் திறக்கப்பட்டது. அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் மீண்டும் ஆரம்பித்த முறுகல் நிலையை அடுத்து 2006 ஆம் ஆண்டு ஆவணிமாதம் சிறிலங்கா அரசினால் மீண்டும் இழுத்து மூடப்பட்டது.

No comments:

Post a Comment