Saturday 29 August 2009

யாழில் இருந்து தமிழனின் இன்றைய இசைவரை...


சங்க இலக்கியமான சீவக சிந்தாமணியில் ஒரு காட்சி. காந்தருவதத்தை என்னும் இசையில் தேர்ந்த அழகிய பெண்ணை யாழிசைப்போட்டியில் வெற்றி பெறுவோரே மணக்கலாம் என்று நாடு முழுவதும் அறிவிக்கப்படுகிறது.
பல இசை வல்லுநர்கள் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவுகிறார்கள். இறுதியில், கதையின் நாயகனான சீவகன் அவனது நண்பன் புத்திசேனனுடன் போட்டிக்கு வருகிறான். போட்டி தொடங்குகிறது.
mayyaஅழகி காந்தருவதத்தை ஒரு பிழையான யாழை அவளது பணியாளரான வீணாபதி என்னும் பேடியிடம் கொடுத்தனுப்புகிறாள். அதை வைத்து போட்டியில் பங்குபெறுமாறு அறிவுறுத்தப்படுகிறான் சீவகன்.
சீவகன் அந்த யாழைச் சோதித்து அந்த யாழ் அதிக ஈரப்பதன் கொண்ட மரத்தால் செய்யப்படது என நிராகரித்துவிடுகிறான்.
அடுத்து வந்த யாழை தீ தாக்கிய மரத்தால் செய்தது என்று நிராகரிக்கிறான்.




No comments:

Post a Comment