யாழ்ப்பாண மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபை ஆகியவற்றுக்கு சிறிலங்கா அரசு அவசர அவசரமாக நடத்திய தேர்தலில் பங்குகொண்ட மக்கள் தமிழ்த்தேசியத்தின் உயிர்நாடி இன்னமும் துடிப்புடன் இருப்பதை உறுதிசெய்துள்ளார்கள். தமது உரிமைகளுக்கான பேரவாவையும் அதற்கு தாம் கொண்டுள்ள உறுதிப்பாட்டையும் மீண்டுமொரு தடவை சிறிலங்கா அரசின் ஊடாக சர்வதேச சமூகத்துக்கும் எடுத்து கூறியுள்ளனர்.
போர் முடிவடைந்ததாக சிறிலங்கா அரசினால் அறிவிக்கப்பட்ட நிலையில் பல இலட்சக்கணக்கான மக்களை முகாம்களிலும் திறந்த வெளிச்சிறைகளிலும் வைத்திருந்தபடி - அந்த மக்கள் அடுத்த நேர உணவுக்கு மன்றாடிக்கொண்டிருக்க - தான் நினைத்த அரசியல் நிகழ்ச்சி நிரலை மக்கள் மீது திணித்து, தனது அதிகார ஆக்கிரமிப்பை நிலைநாட்ட முயன்ற சிங்கள அரசுக்கு தற்போது கிடைத்திருப்பது தோல்வியே ஆகும்.
தொடர்ந்து வாசிக்க...
-சேரன்
No comments:
Post a Comment