Saturday 22 August 2009

பன்னாட்டுச் சமூகத்தின் அச்சத்தின் பின்னணியில் தமிழர் தரப்பின் விளக்கம்

இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பது மற்றும் அரசியல் கருத்து இணக்கப்பாட்டை ஏற்படுத்துவது என்பன தொடர்பில் உள்நாட்டில் உள்ள தமிழர்களுடன் மட்டுமல்ல வெளிநாடு வாழ் தமிழர்களுடனும் சிறிலங்கா அரசு பேச்சுக்களை நடத்த வேண்டும் என்று அமெரிக்க வெளிவிவகாரத்துறை துணை அமைச்சர் றொபேர்ட் ஓ பிளேக் பிபிசி செய்திச் சேவைக்கு அண்மையில் வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருக்கிறார்.

மேலோட்டமாகப் பார்க்கும்போது, அமெரிக்க அரச தரப்பு அதிகாரி கூறிய இந்தக் கருத்து புலம்பெயர்ந்துவாழும் தமிழ்மக்களின் கருத்துக்கள் தொடர்பில் அமெரிக்கா கரிசனைகொள்வது போலவும் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்களுக்குக் கைமேல் பலன் கிடைத்தது போன்ற ஓர் அர்த்தத்தை வெளிப்படுத்தினும், அந்த வாக்கியங்களுக்குப் பின்னால் தொக்கிநிற்கும் பல அர்த்தங்கள் அமெரிக்காவுக்கு மட்டுமல்ல சர்வதேச சமூகத்துக்குத் தொடர்ந்தும் இருந்துவருகின்ற தீராத அச்சத்தின் வெளிப்பாடுகளே ஆகும்.



தொடர்ந்து வாசிக்க...


-முகிலன்

No comments:

Post a Comment