Friday 21 August 2009

நுனிக்கொம்பு


நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி யாகி விடும்

கொம்பிலேறி உச்சாணிக்குச் செல்பவர் முதிர் கொம்பு தாண்டிய பின்னும் ஏறுவாரேயானால் தளிர் கொம்பு ஒடிந்து கீழே விழுந்து உயிர் இழப்பார். மிகத்தெளிவான எளிய உண்மை. இதற்குப் போய் ஒரு குறளா? என்னுடைய பிற மொழி நண்பர் ஒருவர் இக்குறளை வேறு ஒருவரிடமிருந்து கற்றிருந்தார். அவருக்குக் குழப்பம். அந்த நண்பர் அதே அதிகாரத்திலிருந்து கீழ்க்கண்ட குறளையும் கூறி உள்ளார்.
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்

மயிலிறகே ஆயினும் அதிகமான அளவுக்கு பாரம் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துவிடும். இது முதற் குறளைவிட இன்னமும் எளிமையானது.


அர.வெங்கடாசலம்

No comments:

Post a Comment