Monday 10 August 2009

தமிழிலக்கியம்


இன்று உலகத்தில் வாழும் மொழிகளில் மிகவும் பழமையானது தமிழ் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஒரு மொழி செம்மொழி என்ற தகுதி பெற பழமை, கட்டமைப்புடைய இலக்கணம் என்ற அஸ்திவாரம், பண்பட்ட இலக்கியங்கள் என்ற மாளிகை ஆகிய அனைத்தும் தேவை.
இவை எல்லாவற்றிலும் சிறந்து விளங்கும் மொழி, நம் தமிழ் மொழி.

தமிழ் இலக்கியத்தின் காலத்தை வரையறுக்க இயலாது என்றாலும், ஏறத்தாழ 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.

தமிழ் இலக்கியத்தை, சங்ககால இலக்கியங்கள், சங்கம் மருவிய கால இலக்கியங்கள் மற்றும் தற்கால (பிற்கால) இலக்கியங்கள் என்று மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். பழந்தமிழகம், மூவேந்தர்களாகிய சேர, சோழ பாண்டியரின் ஆட்சியில் பசியும் பிணியும் இன்றிச் செழித்திருந்தபோது, சங்க இலக்கியங்கள் தோன்றின. அதிலும், பாண்டியர்கள் முதற்சங்கம்இடைச்சங்கம்கடைச்சங்கம் என்று மூன்று சங்கங்களை ஏற்படுத்தி, தமிழ் வளர்த்தனர்.


தொடர்ந்து வாசிக்க...

No comments:

Post a Comment