Tuesday 10 November 2009

ஈழகாவியம் இலக்கியத்தொடர் - 05

நல்லமனம் கொண்டோரை நாடு போற்றும்!
   நல்லாட்சி செய்வோரை மறைகள் போற்றும்!
கொல்பவர்க்கு வாள்கொடுத்தாற் கொடுமை ஆகும்!
   கூற்றுவனைப் பின்தொடர்ந்தால் மனிதம் சாகும்!
சொல்லுண்மை சரிபார்த்துத் தொடுதல் வேண்டும்!
   சுதந்திரத்தை எல்லோர்க்கும் பகிர்தல் வேண்டும்!
வல்லோர்க்கும் தீமையிலா திருக்க வேண்டும்!
   வளர்நாடு தர்மத்தை வணங்க வேண்டும்!

eelakaaviyam-05


-புதிய பாரதி

1 comment:

அன்புடன் நான் said...

விருத்தம் நல்லாயிருக்குங்க. தொடர்க.

Post a Comment