Wednesday 2 December 2009

தடுப்புமுகாம் மக்கள் 15 நாட்களுக்கு வெளியில் தங்கியிருந்துவிட்டு வர அரசு அனுமதி!


வவுனியா அகதி முகாம்களில் தங்கவைக் கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று முதல் சுதந்திரமாக வெளியில் சென்றுவர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.டிசெம்பர் முதலாம் திகதி முதல் இந்த மக்களுக்கு நடமாட்டச் சுதந்திரம் வழங்கப்படும் என இரு வாரங்களுக்கு முன்னர் அரசு அறிவித்திருந்தது தெரிந்ததே.
நேற்று நண்பகல் வரை ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் முகாமிலிருந்து வெளியேறினர் என்று வவுனியா பதில் பிரதேச செயலாளர் என்.திருஞானசம்பந்தர் தெரிவித்தார்.
"முகாமிலிருந்து செல்வதற்கான போக்குவரத்தே பிரச்சினையாகவுள்ளது. எனினும், மக்கள் அங்கிருந்து செல்வது குறித்து மகிழ்ச்சியாகவுள்ளனர்'' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
6


No comments:

Post a Comment