Saturday 26 December 2009

வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள் வாக்கெடுப்பு: ஒரு வரலாற்று வெகுமானம்


வட்டுக்கோட்டைத் தீர்மானம் பற்றிப் புலம்பெயர் தமிழர்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். இந்த உண்மையை நோர்வே, பிரான்ஸ் மற்றும் கனடா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் எண்பித்துள்ளார்கள். விரைவில் இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளிலும் வட்டுக்கோட்டைத் தீர்மானப் பற்றிய வாக்குக் கணிப்பு (Referendum) நடைபெற இருக்கிறது.
இந்த வாக்கெடுப்பிற்கு ஆதரவாக விழும் வாக்குகளைவிட அதன்பின்னால் உள்ள மக்களது வேட்கையும் துடிப்பும் முக்கியமானது. தேர்தல் நாளன்று அந்தளவு தூரம் ஆர்வம் கரை புரண்டோடியது. எண்பது அகவை தாண்டிய பாட்டன் பாட்டி ஆகியோரைப் பேரப்பிள்ளைகள் கைத்தாங்கலாகப் பிடித்து வந்து வாக்களிக்க வைத்தார்கள்.

No comments:

Post a Comment