Saturday 19 September 2009

சுவடுகள்-3. வானம்பாடி என்ற போரறிவியல் ஆசான்


கப்டன் அன்பரசன் பற்றியும் அவன் வீரச்சாவடைந்த நிகழ்வு பற்றியும் கடந்த சுவட்டில் ‘தன்னைக் கொடுத்து எம்மைக் காத்தவன்’ என்ற தலைப்பில் பார்த்திருந்தோம்.
கப்டன் அன்பரசன் வீரச்சாவடைந்த சம்பவம் நிகழ்ந்தது 04/06/1998. அதுவொரு வியாழக்கிழமை. அதற்கு அடுத்துவந்த வியாழக்கிழமையும் அதேயிடத்தில் ஒரு வெடிவிபத்து நிகழ்ந்தது. அதன்பின் வந்த சில வியாழக்கிழமைகளை ஒருவித பீதியோடு கழிக்கும் வகையில் அந்த இரண்டாவது வெடிவிபத்து ஆழ்ந்த பாதிப்பை எமக்குள் ஏற்படுத்தியிருந்தது.
அன்பரசனின் சம்பவத்தின் பிறகு எமது கற்கைநெறி திட்டமிட்டபடியே நகர்ந்தது. அன்பரசனையும் காயமடைந்த இருவரையும் சேர்த்து மூன்றுபேர் குறைந்திருந்தார்கள். விபத்து நடந்து அடுத்தநாளே கட்டடத்தைத் துப்பரவாக்கி எல்லாம் பழையபடி ஒழுங்கமைத்து படிப்பைத் தொடங்கியிருந்தோம். எவரும் துவண்டுபோய்விட வானம்பாடி மாஸ்டர் விட்டுவிடவில்லை.
veeravanakkamவானம்பாடி மாஸ்டர் எமக்குக் கற்பிப்பதற்கென ஒழுங்கமைக்கப்பட்ட ஆசிரியர். இயக்கத்தின் ‘வெடிபொருள் பொறியமைப்புக் கல்வி’ தொடர்பில் அந்நேரத்தில் அவரே பொறுப்பாக நின்று பணியாற்றிக் கொண்டிருந்தார். பொறியமைப்புக்கள் தொடர்பில் நீண்டகால அனுபவமும் மிகத் தேர்ச்சியும் கொண்டிருந்தார். பொறியமைப்புச் செயற்பாடுகளை விளங்கப்படுத்துவதொன்றும் இலகுவான செயலன்று. கணனிகள் உட்பட நவீன சாதனங்கள் எவையுமின்றி வெறும் கரும்பலகையில் கீறிமட்டுமே கற்பிக்க வேண்டிய நிலையிற்கூட மிக அழகாக எல்லோருக்கும் விளங்கும் வணக்கம் கற்பிக்க அவரால் முடிந்தது. மிக எளிய எடுத்துக்காட்டுக்களோடு பொறியமைப்புத் தொகுதிகளின் செயற்பாடுகளை விளங்கப்படுத்துவார்.



-அன்பரசன்

No comments:

Post a Comment