"சந்தைக்குப் போகணும், காசு குடு; ஆத்தா வைய்யும்", என்று பறட்டையிடம் கெஞ்சும் சப்பாணியின் குரலை யாரும் மறந்திருக்க முடியாது. வாரம் ஒரு முறை கூடும் சந்தையில் என்னவெல்லாம் வாங்கவேண்டும் என்று வாரம் முழுவதும் பட்டியலிட்டு, சிறுகச் சிறுகச் சேமித்து, காசைக் கடைக்காரரிடம் கைமாறும் முன்னே, நூறு முறை எச்சில் தொட்டு எண்ணிய பிறகே கொடுப்பது என்று இருந்தது அந்தக் காலம்.
காலச் சக்கிரம் சுழல, பணப் புழக்கமும், அதன் பரிமாணங்களும் மாறின. இன்று வர்த்தகங்களின் பெரும் பகுதி Card Transaction இல் நடைபெறுகிறது. சொல்லப்போனால், "மால்" என்று சொல்லப்படும் அடுக்குமாடிக் கடைகளிலும் – பெட்ரோல் பங்கிலும் தான் Card Transactions அதிகப்படியாக நடக்கிறது. மிகமிகத் தேவையான அளவு காசை வைத்துக்கொண்டு மற்றதை இம்மாதிரி Card Transaction செய்வது வசதி மட்டுமில்லை, பாதுகாப்பானதும் கூட என்று சொல்லலாம். கடன் அட்டைப் பாதுகாப்பு - சில ஆலோசனைகள் என்னும் பதிவில் மேற்படி விவரங்களைக் காணலாம்.
-தீபா கோவிந்
No comments:
Post a Comment