Friday 18 September 2009

ஒரு புத்தகம் – ஓர் எண்ணம் – ஒரு திரைப்படம்


சொல்லத்தான் நினைக்கிறேன் – 2
-1 –
சடங்கு என்கிற எஸ். பொ எழுதிய நாவலை சென்ற  வாரம் மீண்டும் ஒரு முறை வாசித்தேன்.  கலாசாரம், புனிதம்  என்றெல்லாம் கட்டியமைக்கப்பட்டு, கட்டியழுது கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகத்தில், அதிலும் யாழ்ப்பாணச் சமூகம் பற்றிய இந்நாவலுக்குரிய சாத்தியம் பேரதிசயம் தான்.  அதிலும் குடும்பம் என்ற கட்டி எழுப்பப்பட்ட ஓர் அமைப்பை முதன்மைப்படுத்தி, தனி நபர் ஆசாபாசங்களை முக்கியப்படுத்தாமல் தியாகம், விட்டுக் கொடுத்தல், புனிதம் என்றெல்லாம் பேசப்படும் சமூகங்களில், குடும்ப உறவுகளைப் பேணவும், குடும்பத்தை நிலைப்படுத்தவும் (முக்கியமாக பண ரீதியில்) எடுக்கும் முயற்சிகளில் தனி மனித உணர்வுகளும் விருப்பங்களும் எப்படி நிராகரிக்கபடுகின்றன என்று சொல்கிறது சடங்கு கதை.




-அருண்மொழிவர்மன்

No comments:

Post a Comment