சிறிலங்காவில் சிறுபான்மையின மக்களின் அரசியல்,ஜனநாயக அடிப்படை உரிமைகளின் மீது சிங்கள அரசு காலாகாலமாக மேற்கொண்டுவரும் அடக்குமுறை நடவடிக்கைகளின் பிந்திய வடிவமாக அங்குள்ள சிறுபான்மைக் கட்சிகளின் பெயர்கள் எந்த ஒரு மதத்தையோ சமூகத்தையோ குறிப்பதாக இருக்கக்கூடாது என்ற புதுவிதமான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருக்கிறது.
அதாவது சிறுபான்மை இனங்களான தமிழ், முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் பெயர்களில் 'தமிழ்த்தேசியம்', 'முஸ்லிம் காங்கிரஸ்', 'விடுதலைப்புலிகள்' போன்ற சொற்கள் இருக்கக்கூடாது என்றும் அவ்வாறான பெயர்களுடன் தற்போது இயங்கிவரும் கட்சிகள் தமது பெயர்களை உடனடியாக மாற்றவேண்டும் எனவும் அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. கடந்த ஜுலை 20 ஆம் திகதி இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-தெய்வீகன்
No comments:
Post a Comment