Thursday 17 September 2009

சிறிலங்கா - மேற்குலகம்: திரைமறைவில் நடைபெறும் பனிப்போர்


சிறிலங்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல் சம்பவங்கள், நல்லாட்சி விடயத்தில் ஆளும் மகிந்த அரசு காண்பிக்கும் பொறுப்பற்ற போக்கு, சிறுபான்மையின மக்கள் மீதான திட்டமிட்ட அடக்குமுறை, தெளிவான திட்டமிடலுடன் அரசு மேற்கொள்ளும் இனச்சுத்திகரிப்பு போன்ற பல விடயங்களில் சீற்றமடைந்துள்ள மேற்குலகம் சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் ஏற்படுத்தும்வகையில் மறைமுகமாக பல்வேறு அரசியல் - இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.

போர் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் மனித உரிமைகள் என்ற விடயத்தில் மேற்குலகத்தின் பேச்சை கேட்காத சிறிலங்கா அரசை மேற்குலகம் வெளிப்படையாக சாடியது. சிறிலங்கா அரசும் பதிலுக்கு மேற்குலகுக்கு எதிராக தனது தெளிவான - திட்டமிட்ட - பிரசாரபோரை முன்னெடுத்தது மட்டுமல்லாமல், தனது போர் நிகழ்ச்சிநிரலுக்கு ஓத்துழைக்காத மேற்குலகுக்கு மேலும் சீற்றத்தை ஏற்படுத்தும்வகையில், பணி நிமிர்த்தம்  சிறிலங்காவை தளமாக கொண்டியங்கிய மேற்குலக ஊடகவியலாளர்கள், இராஜதந்திரிகள் பலருக்கு கசப்பான அனுபவங்களை ஏற்படுத்தியது.
-வானதி

No comments:

Post a Comment