Thursday 17 September 2009

ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் புதிய போக்கு


ஈழத்தமிழரின் அரசியல் வாழ்வுரிமை தொடர்பில் இந்தியா புதிய போக்கொன்றைக் கடைப்பிடிக்கும் நோக்குடன் தனது இராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டுவருவதாகவும் தனது புதிய நகர்வினை தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு எடுத்துக்கூறி அதன் ஊடாக புலம்பெயர்ந்துவாழும் தமிழ்மக்களுக்கும் அந்த செய்தியை எடுத்துக்கூறும்படி இந்தியா கோரியிருப்பதாகவும் கொழும்பிலிருந்து பேசவல்ல சில தரப்புக்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன.

விடுதலைப்புலிகளின் ஆயுத போராட்டம் இல்லாத ஒரு வெற்றிடத்தில் ஈழத்தமிழர்கள் விடயத்தில் தம்மால் இறங்கிவந்து பணிபுரிய முடியும் என்றும் ஈழத்தமிழர்களது போராட்டத்தை பிரபாகரனுக்கு முன், பிரபாகரனுக்கு பின் என்ற ரீதியில் தாம் அணுகவிரும்புவதாகவும் இன்றைய காலகட்டத்தில் தம்மை முழுமையாக நம்பலாம் என்றும் தமிழர்களின் அரசியல் விடிவுக்காக தாம் எந்தப் பணியையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் இந்தியா உயர்மட்டம் தமிழர் தரப்புக்கு எடுத்துக்கூறியிருப்பதாகத் தெரிகிறது.
-பொற்கோ 

No comments:

Post a Comment