போர் முடிவடைந்துவிட்டதாக சிறிலங்கா அரசினால் அறிவிப்பு விடுக்கப்பட்டு இரண்டு மாதங்களில், நாட்டின் இராணுவ இயந்திரத்தில் அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ஷ மேற்கொண்டுள்ள அதிரடி மாற்றங்கள் படையினர் உட்பட பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாற்றங்களில் மிகமுக்கியமானதாகக் கருதப்படும் முன்னாள் இராணுவதளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் பதவிப்பறிப்பு அரசுத்தலைவர் மகிந்தவின் பல்வேறு சிந்தனைகளை பட்டவர்த்தனமாக்கியுள்ளது.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் சரத் பொன்சேகாவின் பங்களிப்பு எத்தகையது என்பது அனைவரும் அறிந்த விடயம். நடந்து முடிந்த போரில், வல்லரசுகளின் நிகழ்ச்சிநிரலைக் களத்திலே செயற்படுத்தும் பணியையே சரத்பொன்சேகா மேற்கொண்டிருந்தார்.
No comments:
Post a Comment