Friday 18 September 2009

புவிசார் நிலைகாண் தொகுதி (GPS)


உயிர்வாழும் கிரகம் (Living Planet) என்றறியப்படும் பூமியில் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியென்பது அவற்றின் இடப்பெயர்ச்சி முலமாகவே சாத்தியமாயிற்று. மனிதகுலத்தின் நாகரீகம் மனிதர்களின் இடப்பெயர்ச்சி மூலமாகத்தான் வளர்ச்சிபெற்றது. தொடக்க காலத்தில் கால்போன போக்கில் இடம்விட்டு இடம் நகர்ந்த மனிதன் அவனது தேவைகளும் அறிவும் வளர்ந்தபோது தன்னுடைய இடப்பெயர்ச்சியை இலகுவாக்குவதற்கான வழிவகைகளைத் தேடத் தொடங்கினான்.
காடுகளிலுள்ள பெருமரங்கள், நீர்நிலைகள், சிற்றோடைகள், பெருநதிகள், மலைகள், பறவை மற்றும் விலங்குகளின் அசைவியக்கங்கள், நட்சத்திரங்கள் எனத் தன்னுடைய நகர்வுகளுக்கும் பயணங்களுக்கும் இயற்கையை நம்பியிருந்த, இயற்கையைப் பயன்படுத்திக்கொண்ட மனிதன் தன்னுடைய அறிவின் திறன்கொண்டு தனக்கு வழிகாட்டுவதற்காக உருவாக்கிய கருவிதான் இந்த புவிசார் நிலைகாண் தொகுதி (Global Positioning System). பல்வேறு தேவைகளுக்காகப் பல்வேறுபட்ட கருவிகளை உருவாக்கிய மனிதனின் அறிவுக்குழந்தையான இந்த புவிசார் நிலைகாண் தொகுதி மனிதனை அவனது சரியான பயணப்பாதையில் அழைத்துச்செல்கின்றது.
gpsதற்காலப் பயன்பாட்டிலுள்ள நவீன போக்குவரத்து ஊர்திகளில் வழிகாட்டும் தொகுதி (Navigation System) என்பது ஓர் இன்றியமையாத கருவியாகிவிட்டது. நாம் போகவேண்டிய இடத்தின் முகவரியை வழிகாட்டும் கருவியினுள் உள்ளீடு செய்ததும், நாம் பயணிக்கவேண்டிய பாதையினைத் திரையில் தோன்றும் வரைபடத்திற் குறித்துக் காட்டுவதுடன் நமது பயணத்தின்போது வீதியில் எமது நகர்வினையும் தொடர்ந்து குறித்துக்காட்டும் வேலையினையும் இக்கருவி செய்கின்றது. இச்செயற்பாடுகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதையும் அவற்றின் பின்னணி மற்றும் வரலாறு என்பவற்றையும் இங்கு மேலோட்டமாகப் பார்ப்போம்.


-ஜெயசீலன்

No comments:

Post a Comment