ஆஸ்திரேலியாவினுள் சட்டவிரோதமாக நுழைந்து அகதிநிலை தஞ்சம் கோரிய ஒன்பது சிங்களவர்களை ஆஸ்திரேலிய அரசு சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவின் பிரதமர் கெவின் ரட்டினது புதிய அரசு பதவியேற்று அகதிகளை நாட்டுக்கு திருப்பி அனுப்பும் முதலாவது சம்பவம் இதுவாகும். சட்டவிரோதமாக நாடுகளுக்குள் நுழைந்து அகதி அந்தஸ்து கோருபவர்கள் அவர்களது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவது நீண்ட படிமுறைகளின் கீழ் நடைபெறும் செயற்பாடாக இருந்துவரும்வேளையில், ஆஸ்திரேலிய அரசின் இந்த அதிரடி நடவடிக்கை ஆஸ்திரேலிய ஊடகங்களில் மட்டுமன்றி ஏனைய நாட்டு ஊடகங்களையும் ஆக்கிரமித்துள்ள செய்தியாக மாறியுள்ளது.
-தெய்வீகன்
No comments:
Post a Comment