Friday 9 October 2009

இரும்புக் கம்பிகளின் பின்னால் தமிழரின் இன்னொரு சந்ததி

தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினை எனப்படுவது காலகாலமாக அரசியல்வாதிகளின் உறுதிமாழிகளால் பூசி மெழுகப்படும் விடயமாக இருந்துவருகிறது. அண்மையில்கூட, யாழ்ப்பாணம், அனுராதபுரம் சிறைகளில் தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்ட கைதிகளின் போராட்டம் அரசியல்வாதிகளின் உறுதிமொழியை அடுத்து முடித்துவைக்கப்பட்டிருக்கிறது.

சிறைக்கம்பிகளின் பின்னால் கண்ணீரால் கரையும் இவர்களின் எதிர்காலம் எந்த மந்திரக்கோலால் தீர்க்கப்படப்போகிறது?

யாழ்ப்பாணம், அனுராதபுரம், களுத்துறை, பூசா, வெலிக்கடை, நியூமகசின், நான்காம்மாடி, தெமட்டகொட பயங்கரவாத தடுப்புப் பிரிவு, குற்றப்புலனாய்வுப் பணியகம், கண்டி போகம்பரை சிறைச்சாலை போன்ற இடங்களில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர் யுவதிகள் மிக நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகளின் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இதனைவிட தற்போது தினமும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்படும் நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர், யுவதிகள் பொலிஸ் நிலையங்களில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படுவதும் பின்னர் விடுதலை செய்யப்படுவதும் மறுபடியும் கைதுசெய்யப்படுவதும் அன்றாட நிகழ்வாகவே அமைந்துள்ளது.



தொடர்ந்து வாசிக்க...


-முகிலன்

No comments:

Post a Comment