ஈழத்தமிழரின் ஆயுதவழியிலான விடுதலைப்போராட்டமானது வீழ்ச்சியைச் சந்தித்துள்ள நிலையில், அடுத்தகட்ட முன்னெடுப்புக்கள் பற்றி பல விவாதங்கள் வெளிவரத்தொடங்கியிருக்கும் நிலையில் அவைபற்றிய ஆழமான புரிதல் அவசியமாகிறது.
முப்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்த ஆயுதப் போராட்டமானது ஒவ்வொரு தமிழரிலும் தேசிய உணர்வை ஆழமாக விதைத்துள்ளது. முப்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகளின் ஈகமும் ஓர் இலட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களின் இழப்பும் விடுதலைக்கான எழுச்சியை வீச்சாகியிருக்கிறது. ஆனால் இவ்வளவு ஈகத்திற்கும் இழப்புக்கும் பின்னர் அடுத்தகட்டத்தை நோக்கிய நகர்வில் எவ்வாறு எம்மைச் செம்மைப்படுத்திக்கொள்வது என்பது முக்கியமானது.
-கொக்கூரான்
No comments:
Post a Comment