இந்த ஃபாசில் எரிபொருட்கள் (Fossil Fuel) எங்கிருந்து வருகிறது? பல்லாயிரக் கணக்கான வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த தாவர மற்றும் விலங்குகள் மாண்டழியும் பொழுது அவைகள் புதையுண்டு பலவேறுபட்ட நிலைகளில் பல வேதி மாற்றங்களினூடே பயணித்து இன்று நமக்குப் பயன்படும், எரிவாயுவாகவும், நிலக்கரியாகவும், பெட்ரோலியமாகவும் கிடைக்கிறது.
ஒரு லிட்டர் பெட்ரோலியம் கிடைக்க ஒரு காலத்தில் பல ஆயிரம் நிலப்பரப்பில் இருந்த வனம் அழிந்திருந்தால் மட்டுமே சாத்தியமாம். ஏன் அவ்வளவு, ஒரு அடி நிலக்கரி கிடைக்க பத்து சதுர அடி தாவரப் பொருள் அவசியமாம், அப்படியெனில் பார்த்துக் கொள்ளுங்கள், எவ்வளவு இயற்கைவளம் அழிந்திருந்தால் நாம் இன்று அழித்துத் தீர்க்கும் இந்த வளங்கள் கிடைத்திருக்கக் கூடுமென்று.
- அ. பிரபாகர், PHD
No comments:
Post a Comment