இலங்கைத்தீவானது பிரித்தானியா காலனியாதிக்கத்தின் பின்னர் பல இனப்படுகொலைகளை கண்டிருக்கிறது. 1983 இல் நடந்த இனப்படுகொலையானது உலக மனசாட்சியை உலுப்பிய ஒரு நிகழ்வாக இருந்தபோதும் முதலாவது இனப்படுகொலையாக கருதப்படும் 1956 இல் நடத்தப்பட்ட கல்லோயா படுகொலையை பற்றிய பார்வையை பதித்தல் முக்கியமானது என கருதுகிறோம்.
விடுதலைப்புலிகளால் யாழ்ப்பாணத்தின் திருநெல்வேலியில் நடத்தப்பட்ட பதுங்கிதாக்குதலின் எதிரொலியாகவே ஜூலை இனப்படுகொலை ஆரம்பமானது என இப்போதும் எம்மவரில் சிலர் கூறுவர். விடுதலைப்புலிகளால் சிங்கள படையினர் கொல்லப்பட்டதால் தான் பெரும்பான்மை இனத்தின் எதிர்வினை ஒரு இனப்படுகொலைக்கு வித்திட்டதாக கூச்சப்படாமல் நியாயப்படுத்தும் ”விற்பன்னர்கள்” இப்போதும் எம்மத்தியில் உண்டு. கடந்த கால வரலாறுகளை சரியாக அறிந்துகொள்ளாமல் விட்டாலும் அல்லது வரலாற்றை கெட்டித்தனமாக மறைக்க முற்பட்டாலும் நிகழ்காலத்தை மட்டுமல்ல எதிர்காலத்தையும் கேள்விக்குரியதாக்கிமாற்றிவிடுவோம்.
-கொக்கூரான்
No comments:
Post a Comment