Thursday 1 October 2009

இந்திய - இலங்கை கூட்டுச்சதியில் பறிபோகும் அபாயத்தில் தமிழீழ பொருண்மியம்

வன்னிப் பெருநிலப்பரப்பில் 600 கோடி ரூபா முதலீட்டில் பாரிய விவசாய நடவடிக்கையை மேற்கொள்வதற்கான திட்டமிடல் செயற்பாடுகள் மிகத்துரிதமாக இலங்கை அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வரவேற்றக்கப்படவேண்டிய இத்திட்டம் அரசியல்வாதியான பசில் ராஐபக்ச தலைமையின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பது பல சந்தேகங்களை தோற்றுவிக்கின்றது.
அதேவேளை அரசியல் பலவீனத் தள நிலையிலிருக்கும் தமிழ்மக்கள் இதை எவ்வாறு எதிர்கொள்ள போகின்றார்கள்; என்ற கேள்வியை சிந்திக்க வேண்டிய கட்டாயத்திலுள்ளோம். ஏதோ ஒருவகையில் நிறைவேறப்போகின்ற திட்டத்தை எவ்வாறு எம்மக்களுக்குச் சாதகமாக மாற்றுவது, அரசியல் ரீதியாக வரக்கூடிய சிக்கல்களை எவ்வாறு எதிர்கொள்வது போன்ற பிரதான விடயங்களில் உள்ளுர், புலம்பெயர் முதலீட்டார்களும் புலமைசார்வல்லுனர்களும் தமிழ் அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டிய தார்மீக பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும் என்பது வன்னி விவசாய பெருமக்களின் எதிர்பார்ப்பு.
eela-economyவிவசாய மேம்பாட்டுத்திட்டத்தின் ஆரம்பகட்ட நடவடிக்கையாக சாத்தியகூற்று ஆய்வினை மேற்கொள்ளும் விவசாய விஞ்ஞானிகளின் குழு கடந்தவாரம் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்தது. ஒரு துறைசார் திட்டமிடலுக்கான இக்குழு, நாட்டின் அரசியல் மற்றும் அதிகார உயர்மட்டங்களுடனான சந்திப்பினை மட்டுமே முக்கியத்துவப்படுத்தியிருக்கின்றது. இச்செயற்பாடு, விவசாய மேம்பாட்டுதிட்டத்தில் அரசாங்கத்தின் அபிலாஷைகளே பிரதானமாக்கப்பட்டிருக்கின்றது என்ற முடிவினையே தருவதாக அமைந்தள்ளது. ஏனெனில்; ஏற்கனவே மகாவலித்திட்டத்தினூடாக வன்னியில் பாரிய சிங்களக்குடியேற்றங்களை நிறுவ வேண்டும் என்ற இலங்கை அரசின் நீண்டநாள் கனவுக்கோவை மீளத் தூசுதட்டப்பட்டு, சர்வதேச உதவியுடன் புத்துயிர் கொடுக்கக்கூடிய வாய்ப்புக்கள் மேலோங்கியிருப்பதே இந்த ஆரம்பகட்ட நடவடிக்கைகள் சுட்டிக்காட்டி நிற்கின்றன.




1 comment:

தமிழ் முல்லை said...

தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி..!

முல்லை பெரியாறும் .. துரோகத்தின் வரலாறும்...3

வாருங்கள் வந்து துரோகத்தை அறிந்து கொள்ளுங்கள் ...!!!

Post a Comment